அட்சய திருதியை விற்பனை பெருசா இருக்காது.. புலம்பும் கோயம்புத்தூர் நகைக்கடைக்காரர்கள்.!!

கோயம்புத்தூர்: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோயம்புத்தூரில் உள்ள தங்க நகை வணிகர்கள் விற்பனை சரிவால் பெரும் கவலை அடைந்துள்ளனர். அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவது போன்ற உலகளாவிய காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்த நிலைமை மோசமாகி வருகிறது.

கோவை நகை வணிகர்கள் கூறுகையில், அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஒரு லட்ச ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை நெருங்கி வருவதால், கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தின் விற்பனை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த விலை உயர்வு நகைத் துறையை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது என்று கூறுகின்றனர்.

அட்சய திருதியை விற்பனை பெருசா இருக்காது.. புலம்பும் கோயம்புத்தூர் நகைக்கடைக்காரர்கள்.!!

நடப்பு ஜனவரி மாதத்தில் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7,000-ஐ தாண்டியது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அது ரூ.9,005 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு சவரன் ரூ.72,040-ஐ தொட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை சுமார் ரூ.23,000 வரை அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. முத்துவெங்கட்ராம் கூறுகையில், எங்கள் தொழிற்சாலையிலேயே பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால், திறமையான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். இது தொழில்துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறியுள்ளார்.

நாட்டின் மூன்றாவது பெரிய தங்க நகை உற்பத்தி மையமாக விளங்கும் கோயம்புத்தூரில் 600-க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகள் உள்ளன. இங்கிருந்து ஆண்டுதோறும் 100 டன்களுக்கும் அதிகமான தங்க நகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்கள் பெரிய உற்பத்தியாளர்களாக இருந்தாலும், கோயம்புத்தூரில் செய்யப்படும் கைவினை நகைகள் தனித்துவமான பாணி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்காக மிகவும் விரும்பப்படுகின்றன.

வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ள நிலையில், விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மக்கள் தங்க நகை வாங்குவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதையும், விலை குறையும் என்ற நம்பிக்கையில் தங்கள் முடிவுகளைத் தள்ளிப் போடுவதையும் காட்டுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நகைக்கடை கூட்டமைப்பின் தலைவர் பி. சபரிநாத் கூறுகையில், அட்சய திருதியை மாதங்களில் பொற்கொல்லர்கள் இரவு பகலாக வேலை செய்வார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு போதுமான வேலை இல்லை, இதனால் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தங்கத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தால் எதுவும் அதிகமாக செய்ய முடியாது என்றாலும், இறக்குமதி வரியை ஆறு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாகக் குறைத்தால் விற்பனை அதிகரிக்கும் என்று நகைக்கடைக்காரர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையில், இன்றைய தங்கம் விலையும், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் 1 கிராம் 24k தங்கத்தின் விலை ஆனது, 71 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி இன்று ரூ.9752 ஆக விற்கப்படுகிறது. அதுவே ஒரு சவரன் ரூ.568 குறைந்து 78016 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், 22k ஒரு கிராம் தங்கம் 65 ரூபாய் குறைந்துள்ளது. அதன் விலை இன்று ரூ.8940 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.71520 ஆகவும் விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை ரூ.1 கிராம் ரூ1. குறைந்து ரூ.111 ஆக உள்ளது. ஒரு கிலோ ரூ.111000 ஆக விற்பனையாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+