சென்னை: பொதுவாகவே இந்தியக் குடும்பங்களில் தங்கம் ஒரு மதிப்புமிக்க சொத்தாகக் கருதப்படுகிறது. தங்கத்தில் போடப்படும் பணம் நிச்சயம் சேமிப்பு தான் என்பதே நாட்டில் உள்ள பலரின் எண்ணமாக உள்ளது. இந்த வருடத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உயரத்தை தொட்டாலும், அதன் மவுசு மட்டும் குறையவே இல்லை.
இந்நிலையில் தங்கத்தின் விலை சீக்கிரம் ரூ. 2 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விலை ஏறினால் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடந்த 9 ஆண்டுகளில், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 1987 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 2,570 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 19 ஆண்டுகளுக்குப் பின் 2006 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,250 ரூபாயாக உள்ளது. அதாவது சுமார் 6 முதல் 8 வருடங்களுக்குள் மூன்று முறை இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்று எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 2 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முதலீட்டாளர்கள், இந்த மைல்கல்லை எட்ட இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். தங்கத்தின் விலை பொதுவாக புவிசார் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிலைகளை பொறுத்து மாறுபடும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் பாண்டமிக் காலக்கட்டம் மற்றும் வார் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட 75 % தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
LKP செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சியாளர் ஜதீன் திரிவேதி, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற முக்கிய உலகளாவிய மாற்றங்கள் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் குறுகிய காலத்திற்குள் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதுபோன்ற விலை ஏற்றத்தின் காரணமாக அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ரூ. 2 லட்சத்தை எட்டும் என்று கூறியுள்ளார்.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் நிதி மேலாளரும், தலைவருமான விக்ரம் தவான், தங்கத்தின் விலை கடந்த 19 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தைத் தரும் என்று கூறியுள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்தால் சீக்கிரம் மும்மடங்காகும் என்ற எதிர்பார்ப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய நிலையில் பணவீக்கம், புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகிய காரணங்களுக்கு மத்தியில் ஒரு நிலையான முதலீடாக தங்கம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்னதான் Bitcoin மற்றும் Ethereum போன்ற கிரிப்டோகரன்சிகள் பிரபலமான மற்றும் சாத்தியமான வருமானத்திற்காக கவனத்தைப் பெற்றிருந்தாலும், முதலீட்டாளர்கள், அதன் நிலையான தன்மை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர்.
எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானது என்று பல நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
More From GoodReturns

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications