தங்கத்தின் எதிர்காலம் டாப் லெவலில் இருக்கும்.. ஏன் தெரியுமா..? மிலிந்த் முச்சலா விளக்கம்..!!

நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலை 59% உயர்ந்துள்ள நிலையிலும், சர்வதேச பொருளாதார சூழலை கருத்தில் கொண்டால், அதன் நீண்ட கால வளர்ச்சிப் பாதை வலுவாகவே நீடிப்பதாக ஜூலியஸ் பேயர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலிந்த் முச்சலா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவது, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் மத்திய வங்கிகள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் இருந்து நிதியைத் திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால் தங்கத்தின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தற்போதுள்ள உலகப் பொருளாதாரச் சூழலில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தின் எதிர்காலம் டாப் லெவலில் இருக்கும்.. ஏன் தெரியுமா..? மிலிந்த் முச்சலா விளக்கம்..!!

கடந்த நிதியாண்டுகளில் கார்ப்பரேட் வருவாய் 20%க்கும் மேல் வலுவான வளர்ச்சியைக் கண்டாலும், FY25 ஒருங்கிணைக்கும் ஆண்டாக மாறியது. அமெரிக்காவின் புதிய வரிகள், உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள், நகர்ப்புற தேவை குறைவது போன்ற காரணங்களால் சமீபத்திய காலாண்டுகளில் வருவாய் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. Q2FY26-லும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது.

எனினும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சிப் பாதை அதிகரிக்கும் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிக் குறைப்பு, ஜிஎஸ்டி 2.0, வட்டி விகிதக் குறைப்புகள் மற்றும் பணப்புழக்கம் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும்.

மேலும், இந்த ஆண்டு சாதகமான பருவமழை விவசாய வாய்ப்புகளை உயர்த்தி, உணவுப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதால், ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மேம்படும். உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனியார் துறை முதலீடுகள் புத்துயிர் பெறுவதன் மூலம் கார்ப்பரேட் வருவாய் வளர்ச்சி விரைவில் இரட்டை இலக்கப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.5% முதல் 6.8% வரம்பில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி, உலக வங்கி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் கணித்துள்ளன. உள்நாட்டுத் தேவை மற்றும் தனியார் துறை முதலீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தக் கணிப்புகளைத் தாண்டிய வளர்ச்சி சாத்தியமாகும்.

நிதி மற்றும் வங்கிகள் துறை குறித்துப் பேசிய மிலிந்த் முச்சலா, 2025 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டதால், பெரும்பாலான வங்கிகளின் நிகர வட்டி வரம்பு சுருங்கியுள்ளது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளில் இந்தச் சுருக்கம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி அமைப்பில் போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்து, ஆபத்தை குறைப்பதுடன், வட்டி விகிதக் குறைப்புகளை முன்கூட்டியே செயல்படுத்துவதன் மூலம் கடன்களின் வளர்ச்சி மேம்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழலில், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை விட, ஆட்டோ துணை நிறுவனங்களில் முதலீடு செய்வது மிகவும் சாதகமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இரு துறைகளின் வளர்ச்சியும் பொதுவாக ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்றும், முதலீட்டு முடிவுகள் தனிப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்புகள், சந்தை நிலை மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+