இந்திய மக்கள் எவ்வளவு விலை உயர்ந்தாலும் தொடர்ந்து வாங்கும் பொருள் தங்கம் தான், விலை உயர்வால் வாங்கும் அளவு குறைந்தாலும் திட்டிக்கொண்டே வாங்குவதும், வாங்கிய பின்பு மகிழ்ச்சி அடைவதும் சாமானிய மக்களின் பழக்கமாகவே உள்ளது.
பெரும் முதலீட்டாளர்களும், பணக்காரர்களும் பங்குச்சந்தை, அரசு பத்திரம், பிட்காயின் எனப் பலவற்றில் முதலீடு செய்தாலும் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சமீபத்தில் Zerodha நித்தின் காமத் கூறுகையில் ஒரு குடும்பத்தின் மொத்த முதலீட்டில் 10-15 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்தால் பணவீக்கம் குறித்த கவலை இருக்காது எனத் தெரிவித்தார்.

இது ஒவ்வொருவரின் முதலீட்டு விருப்பத்திற்கும், ரிஸ்க் அளவீட்டுக்கும் மாறுபடும். சரி நாம விஷயத்திற்கு வருவோம், இந்தப் பட்ஜெட்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருக்கும் வேளையில் தங்கம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தங்கம் பார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற நகைத் துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைக்கு இந்திய வர்த்தக அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது என அரசு அதிகாரிகளும், தொழில்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நலிவடைந்து வரும் நகை ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரி நடைமுறையில் இருப்பது பெரும் சுமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், தங்க பார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், கட்டணங்களைக் குறைப்பதற்கும் வர்த்தக அமைச்சகம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தங்க பார் மீதான வரிக் குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரத்தின கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) அனைத்து வகையான தங்கம் மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 5% ஆகக் குறைக்கவும், மற்றும் இந்தியாவின் நகைக்கடைகளுக்கான செலவுகளைக் குறைக்கக் கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மீதான சுங்க வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
GJEPC இன் தலைவர் விபுல் ஷா கூறுகையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உலக அளவில் மிக அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சகம் கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ஃபைண்டிங்க்ஸ் (findings), தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள், மற்றும் தங்கத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் spent catalysts ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ஃபைண்டிங்க்ஸ் (findings) மற்றும் நாணயங்கள் மீதான புதிய இறக்குமதி வரி விகிதம் 15% ஆகும். மேலும் தங்கத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் spent catalysts இறக்குமதி வரி விகிதம் 14.35% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் புதிய வரி மாற்றம் ஜனவரி 22,2024 முதல் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications