சென்னை: சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி 2024 நிலவரப்படி, ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,705 க்கும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,315 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாகும். இந்தியாவில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வது இரண்டு வகையில் மக்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறும் மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. தங்கத்தின் மதிப்பு ஏறும்போது அதே அளவிற்கு நீங்கள் ஒரு பெரிய தொகையை கடனாக பெற முடியும்.

இது குறித்து பேசிய ரேடியன் ஃபின்சர்வ் நிறுவனர் சர்மா, தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதனால் கடன் வாங்குபவர்களுக்கு, தங்கள் கடன்களின் மூலம் சொத்துகளை மேம்படுத்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை தங்கம் பிரதிபலிக்கிறது. மேலும், தங்கத்தில், முதலீடு செய்வது நிலையான முதலீடாக நம்பப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
தங்க நகை கடன்கள் ஏன் மக்களிடையே பிரபலமாக உள்ளது?: அவசர தேவைகளுக்கு தங்களிடம் உள்ள நகைகளை வைத்து பணம் பெறுவது நம்மில் பலருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. இதனால் யாரிடமும் சென்று கடன் கேட்காமல் நம்முடைய சொந்த நகைகளை வைத்து எளிதில் பணம் பெற முடியும்.
அது மட்டுமில்லாமல் EMIகள் போன்ற எந்த வங்கி கடன்களிலும் நாம் மாட்டாமல் இருக்க முடியும். மேலும் மூன்று அல்லது ஆறு மாத இடைவெளிக்குள் நாம் சிறிய தொகையை நகையின் மேல் செலுத்தி, எளிதில் அடமானம் வைத்த நகையை வீட்டிற்கு எடுத்து வர முடியும்.
மேலும் தங்க நகை கடன் மக்களிடம் பிரபலமாக இருப்பதற்கான மற்றொரு காரணம் அதன் விரைவுத்தன்மை. நாம் வங்கிகளில் கடன் பெற சில நாட்கள் செலவிட வேண்டி இருக்கும். ஆனால், நாம் நகைகளை கொண்டு, உடனே அருகில் உள்ள அடமானக் கடைகளுக்குச் சென்று எளிதில் பெற முடியும்.
மறுபுறம் தங்க கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்க சலுகைகளை வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி குறைவான வட்டியில் கோல்ட் லோன்களைப் பெற முடியும்.
கடன் வாங்குபவர்கள் தொடர்ந்து ஒரு நம்பகமான நிதி திரட்டும் வழியை தேடுகின்றனர். அதற்கு உதவும் வகையில் நகைகளை வைத்து பெறும் லோன்கள் உள்ளன. இதனால் கோல்ட்லோன் பலரின் விருப்பத்தேர்வாக உள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் சிறப்பான சலுகைகளை பெற பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் உடன் அவர்கள் தரும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். இது உங்களின் ஆக்கபூர்வ நிதி செயல்பாட்டிற்கு உதவியானதாக இருக்கும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!



Click it and Unblock the Notifications