தங்கம் விலையில் திங்கட்கிழமை பதிவான சரிவுக்கு பின்பு தொடர்ந்து 2வது நாளாக விலை உயர்ந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் 4430 டாலர் வரையில் சரிந்த ஒரு அவுன்ஸ் தங்கம் வெறும் 2 நாட்களில் 5,082.02 டாலர் வரையில் புதன்கிழமை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் ஈரான் நாட்டில் உருவான பதற்றம் தான்.
கடந்த வாரம் ஏற்பட்ட வரலாற்று ரீதியான கடுமையான ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு பதிவான இந்த உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி வரும் வேளையில் ஈரான் நாட்டில் உருவான பதற்றம் தங்கம் மீண்டும் முக்கிய முதலீடாக மாற்றியுள்ளது.

அரேபிய கடலில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் USS Abraham Lincoln-க்கு அருகில் வேகமாக நெருங்கிய வந்த ஈரான் ட்ரோனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரான் மக்கள் போராட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு பெரும் பிரச்சனையாக இருந்த நிலையில், தற்போது ஈரான் ட்ரோன் அமெரிக்க போர் கப்பலை தாக்க முயன்றுள்ளது. டிரம்ப் ஈரான் நாட்டில் ராணுவ தாக்குதல் மூலம் ஈரான் அரசை கவிழ்க்க மக்களுக்கு உதவி செய்வதாக அறிவித்தார். ஆனால் அமெரிக்க தாக்குதலுக்கு வளைகுடா நாடுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த காரணத்தால் டிரம்ப் பின்வாங்கினார். இதேவேளையில் ஈரானில் மக்கள் போராட்டத்திற்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவமாகவும் மக்கள் கிளம்பினர். இதனால் அமெரிக்காவின் ராணுவ தாக்குதல் பதற்றம், மக்கள் போராட்டம் தொடர்பான பதற்றம் குறைய துவங்கியது.
இந்த சூழ்நிலையில் தான் ஈரான் ட்ரோனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிசீலித்து வருகிறார். இந்த சம்பவம் வளைகுடா சந்தையில் மீண்டும் பாதுகாப்பு சொத்தான தங்கத்திற்கான தேவையை உயர்த்தியுள்ளது.
ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ஓமானில் நடக்க வேண்டும் என்றும், துருக்கியில் வேண்டாம் என்றும் கோரியுள்ளது. அணு திட்டம் தொடர்பான இருதரப்பு பேச்சு இதில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக ஈரான், அமெரிக்கா உடன் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஏற்கனவே சிக்கலான நிலையில் உள்ளதால் முதலீட்டாளர்கள் இந்த பேச்சுவார்த்தையை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதோடு மற்றொரு சம்பவத்தில் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் துப்பாக்கி படகுகள் அமெரிக்க டேங்கரை நெருங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஈரான் - அமெரிக்கா நாடுகள் மத்தியில் இந்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தை சற்று பலவீனப்படுத்தியுள்ளன. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துக்களுக்கு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர். இந்த புவிசார் அச்சுறுத்தல் பாதுகாப்பு சொத்துக்களான தங்கத்தின் மீதான தேவையை மீண்டும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications