தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு!! பெரிய பிரச்சினை முடிந்தது!!

அட்சய திருதியை நெருங்கும் வேளையில் இந்திய வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை திடீரென நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு தங்கம், வெள்ளி இறக்குமதி நிறுத்தப்பட்டு இருப்பதால் உள்நாட்டில் டிமாண்ட் அதிகரித்து, சப்ளை குறைந்து தங்கம் , வெள்ளி விலை உயர்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்த நிலையில் மத்திய அரசு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியாவிற்கு தேவையான தங்கம் மற்றும் வெள்ளியில் பெரும்பகுதியை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். பொதுவாக இந்தியாவில் செயல்படக்கூடிய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளியை கொள்முதல் செய்யும். ஆனால் தற்போது அவை நிறுத்தி வைத்திருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. மத்திய வர்த்தகத் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய , DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகம் ஒவ்வொரு நிதி ஆண்டு தொடக்கத்தின் போதும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக கூடிய இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு!! பெரிய பிரச்சினை முடிந்தது!!

அந்த வகையில் 2025 ஏப்ரலில் வெளியான அறிவிப்பு கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. அதன் பிறகு DGFT இதுவரை புதிதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதாவது தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் அளித்து வங்கிகள் , நிறுவனங்களின் பட்டியலை வெளியிடாமல் உள்ளது. எனவேதான் இந்திய வங்கிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கின்றன என தகவல்கள் வெளியாகின.

Also Read

DGFT-இன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வராமல் இருந்ததால் 8 டன் வெள்ளி, 5 டன் தங்கம் சுங்கத்துறை கிளியரன்ஸ் செய்யாமல் தேங்கி கிடக்கிறது என்றும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே கிளியரன்ஸ் கொடுத்து இந்த தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் கொண்டு வரப்படும் , அதே போல புதிய ஆர்டர்களும் கொடுக்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Recommended For You

உலக சந்தையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இதனால் இந்தியா ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்து இருக்கிறது. இத்தகைய சூழலில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக அரசு தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாக சொல்லப்பட்டது.

இதனால் தங்கம், வெள்ளி விலை உயருமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் மத்திய அரசு வங்கிகள் தங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஃபெடரல் பேங்க், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, கரூர் வைசியா வங்கி, எஸ் பேங்க் உள்ளிட்ட 15 வங்கிகள் 2029 ஆம் ஆண்டு மார்க் 31ஆம் தேதி வரை தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா தங்கத்தை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் நிலுவையில் இருக்கக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய தொடங்கும் இதன் காரணமாக உள்நாட்டில் தங்கம் , வெள்ளிக்கான சப்ளை சீராகும் எனவே பெரிய அளவில் விலை உயர்வது என்பது தடுக்கப்படும்.


Article Corrections

news updated with latest government approval for gold import order to the banks

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+