டெல்லி: உலகிலேயே இந்தியாவின் பொது விநியோக திட்டம் தான் மிகப்பெரிய அளவிலான மக்கள் நலன் திட்டமாக இருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கிலான மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சரியான பயனாளிகளுக்கு இது சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் அடையாள சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 5.8 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இகேஒய்சி எனப்படும் Know Your Customer சேவை மூலமாக ரேஷன் அட்டைகளில் உள்ளவர்களின் விவரங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு களையப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி சுமார் 80.6 கோடி பயனாளிகளை கொண்ட பொது விநியோக நடைமுறையில் 20.4 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோக நடைமுறையை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கணினி மயமாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த குடும்ப அட்டைகளில் 99.8 சதவீதமும் தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த இகேஒய்சி நடைமுறையில் சுமார் 5.8 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆதார் இணைப்பு மற்றும் மின்னணு எடை சாதனங்கள் போன்ற உத்திகள் மூலம் பொது விநியோகத்தில் இருந்த குறைபாடுகள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தகுதிவாய்ந்த பயனாளிகள் மட்டுமில்லாமல் போலியான நபர்களையும் இவை சென்றடைவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. எனவே தான் இகேஒய்சி முறையை அரசு கொண்டு வந்தது. இது தற்போது பலன் தந்துள்ளதாக அரசு கூறுகிறது.
சரியாக பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின்கீழ் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவே வாடிக்கையாளர் அடையாள சரிபார்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 64 சதவீத பயனாளிகள் இகேஒய்சி மூலம் பதிவு செய்துள்ளார்கள் ,மீதமுள்ள பயனாளிகளுக்கும் இகேஒய்சி முடிப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான கடைசி தேதியாக டிசம்பர் 31ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுடைய கைரேகை பதிவு செய்து இகேஒய்சி புதுப்பித்துக் கொள்ளலாம் இல்லையெனில் ரேஷன் கார்டு நீக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications