சோன்பத்ரா என்கிற இந்தி சொல்லுக்கு, தங்கத்தால் நிறைந்திருக்கும் இடம் என்று பொருளாம்.
பெயருக்கு தகுந்தாற் போல, தங்கத்தால் தான் நிறைந்து இருக்கிறது சோன்பத்ரா என பூரித்துக் கொண்டிருந்தோம்.
இந்த சோன்பத்ரா எங்கு இருக்கிறது. இந்த இடத்தில் யார் எல்லாம் தங்கம் தேடி இருக்கிறார்கள் போன்ற சுவாரஸ்ய விவரங்களைத் எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தோம்.
சோபன் பத்ரா
யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த மாவட்டத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இந்த மாவட்டம் மட்டும் 4 மாநில எல்லைகளைக் கொண்டது. மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார். இதற்கு எல்லாம் மேல், இது மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாம்.
தங்கம்
இந்த மாவட்டத்தில், சோன் பஹாடி என்கிற பகுதியில் சுமாராக 2,943 டன் தங்கமும், ஹார்டி என்கிற பகுதியில் சுமாராக 646 டன் தங்கமும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தங்கம் மட்டுமின்றி, மற்ற சில கனிமங்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியானது.
தேடுதல் வேட்டை
பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போதே, இந்த சோன் பத்ரா பகுதியில் தங்கம் இருக்கலாம் என யூகித்து இருக்கிறார்கள். அந்த யூகத்தை சரி பார்க்க, பிரிட்டிஷ்காரர்களே, அன்றைய சோன் பத்ரா பகுதியில் தங்கத்தை தேடி அலைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
ஜி எஸ் ஐ மறுப்பு
ஆனால் தற்போது பிடிஐ-ன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மாவட்ட சுரங்க அதிகாரிகள் சொன்னது போல, உத்திரப் பிரதேசத்தில் சோபன் பத்ரா மாவட்டத்தில், 3,000 டன் அளவுக்கு எல்லாம் தங்கம் கண்டு பிடிக்கவில்லை" என Geological Survey of India (GSI) அமைப்பு சொல்லி இருப்பதாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பரபரப்பு
இந்தியாவில் 3,600 டன் தங்கமா என கடந்த சில நாட்களாக இந்தியா முழுக்க பேசப்பட்டு வந்த பரபரப்பான தங்க சுரங்க செய்திக்கு தற்போது Geological Survey of India (GSI) முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த அமைப்பிடம் இருந்து, முறையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.