இந்தியாவின் மறைமுக வரி விதிப்பில் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இன்றைய கூட்டத்தின் இறுதியில் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) மாற்றங்கள் வரும் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், வர்த்தக நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
இப்போது நடைமுறையில் உள்ள நான்கு ஜிஎஸ்டி வரி நிலைகளான 5%, 12%, 18% மற்றும் 28% அளவுக்கள் புதிய முறையில் அது இரண்டு நிலைகளாக குறைக்கப்பட உள்ளது. இந்த வரி பலகை குறைப்பை ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1. முக்கிய பொருள்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு 5% வரி.
2. பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவைகள் - 18% "ஸ்டாண்டர்ட்" விகிதம்.

இந்த சுருக்கப்பட்ட இரண்டு நிலை வரிமுறை மூலம் சந்தையில் வரி விதிப்பில் இருக்கும் குழப்பங்கள் குறையலாம், வாணிகச் செலவுகள் எளிமையாகக் கணக்கிடப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேபோல் பல பொருட்களின் விலை குறையும் என்பதால் மக்களுக்கு கையில் கூடுதல் நிதி ஆதாரம் கிடைக்கும்.
மேலும் கவனிக்க கூடிய விஷயமாக பான் மசாலா, குட்கா, சிகரெட், ஜர்தா, சுருட்டு (பீடி), போன்ற புகையிலை சார்ந்த பொருட்களில் தற்போதுள்ள ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் இழப்பீடு செஸ் (Compensation Cess) அப்படியே தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய டிவிஸ்டாக பார்க்கப்படுகிறது, நாளை ஐடிசி பங்குகள் உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
புகையிலை பொருட்கள் மீது 40 சதவீத வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு இன்னும் கடன் மற்றும் வட்டி தொகுப்புகளை முழுமையாகத் தீர்க்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பொருட்களுக்கான புதிய வரி விகித நடைமுறையை எப்போது தொடங்குவது என்பதை நிதியமைச்சகமும், ஜிஎஸ்டி கவுன்சிலும் இணைந்து முடிவு செய்யும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications