டெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 95,480 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 95,480 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 10.4 சதவீதமும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 4 சதவீதமும் அதிகம்.
கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 17,741 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 23,131 ரூபாயும் கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 47,484 கோடி ரூபாயும் மற்றும் இறக்குமதி வரி 22,442 கோடி ரூபாயும் அடங்கும். இவற்றோரு செஸ் வரி 7,124 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

இதில் இறக்குமதி வரி 788 கோடி ரூபாயும் அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டிக்கு 21260 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 16,997 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது 86,449 கோடி ரூபாயாகும். இதே ஜூலை மாதத்தில் 87,422 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் 90,917 கோடி ரூபாயும், கடந்த மே மாதத்தில் 62,151 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 32,172 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்ததான அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கின. இதனால் மத்திய மா நில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் முடங்கி போயின. இதனால் அரசு பலத்த நிதி பற்றாக்குறையினையும் சந்தித்து வருகின்றது.
இதற்கிடையில் மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியினை கொடுக்க வேண்டும் என பல மாநில அரசுகளும், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.

பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசின் ஆலோசனையின்படி, ரிசர்வ் வங்கி மூலம் பணத்தை கடனாக பெறுதல் முறையும், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை நீட்டிப்பதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு பல எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், சில மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இழப்பீட்டு காலத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ளன. அதே நேரத்தில், இழப்பீடு தொடர்பான விஷயமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி கூட்டம் அக்டோபர் 5-ம் தேதி (நாளை) நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications