இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் இன்று எடுத்துள்ளது. இந்தியாவில் இனி பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள், பெட்ரோல் வாகனங்கள், டீசல் வாகனங்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்தியுள்ளது நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில்.
இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் சந்தை மிகப்பெரியதாக இரு்ககும் வேளையில் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மீதான வரி 12% -லிருந்து 18% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவான 'ஃபிட்மென்ட் கமிட்டி', இந்த வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதைய 12% -லிருந்து 18% ஆக உயர்த்தும் பரிந்துரையை சமீபத்தில் செய்திருந்தது. இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் நடைபெற்று வரும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த வரி உயர்வு பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையை உயர்த்தி, அதன் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. தற்போது புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் 5% சலுகை விகிதத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டால், வாங்குவோரின் விருப்பம் குறைந்து, எலக்ட்ரிக் வாகனங்களின் 2ஆம் கட்ட சுழற்சி பாதிக்கப்படும் என எதரிபார்க்கப்படுகிறது.
இந்த முடிவு ஆட்டோமொபைல் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீதான வரி உயர்வு, செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் சந்தையை நேரடியாக பாதிக்கும். இதை நம்பி வர்த்தகம் செய்யும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications