இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள், கொரோனா சம்பந்தபட்ட மருத்துவ பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகின்றது.
இதனால் பல தரப்பிலும் இருந்தும் கொரோனா தொடர்பான மருந்து பொருட்கள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் என பல பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் இதனையே வலியுறுத்தி வந்தன. எனினும் மத்திய அரசோ வரி விதிப்பினை ரத்து செய்வது மிகை வரியை செலுத்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறி வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்திற்கும் பிறகு, ஏழு மாதங்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து வருகின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொடர்பான இறக்குமதி செய்யும் நிவாரண பொருட்களுக்கு வரி சலுகை அளிக்கப்படுவதாகவும். இது ஆகஸ்ட் 31 வரையில் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்தான அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு கொரோனா வைரஸினை தொடர்ந்து மக்களை பயமுறுத்தி வரும் கரும்பூஞ்சை வைரஸினை குணப்படுத்தக் கூடிய, மருந்தான ஆம்போடெரிசின் பி (amphotericin B )மருந்திற்கும் வரி சலுகை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருந்துகள் விலை குறையும். இத நெருக்கடியான நேரத்தில் பாதிகப்பட்டுள்ள பல லட்சம் மக்களுக்கு உதவும்.
இது தவிர கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகள் மீதான வரி குறைப்பது குறித்து ஆலோசித்து, ஜூலை 8ம் தேதி விரிவான அறிக்கை அளிக்கப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications