மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 49வது கூட்டம், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நண்பகல் 12 மணிக்குத் துவங்கியது. இக்கூட்டம் முடிவடைந்து மாலை 4.30க்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விடுவிக்க ஒப்புதல் அளித்தது முதல் பல முக்கியமான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி இழப்பீடு கிடைக்கும்..? எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது..? வாங்க பார்ப்போம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.16,982 யை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை இல்லாதபோதும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு சொந்த நிதி ஆதாரத்திலிருந்து நிலுவைத் தொகையை விடுக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை ரூ.1,201 கோடி கிடைக்க உள்ளதாகத் தெரிகிறது.
ஐந்து வருட இழப்பீடு முடிந்தது
இந்தத் தொகையை வரும் காலத்தில் வசூலிக்கப்படும் செஸ் வரியில் இருந்து ஈடு செய்யப்பட உள்ளதாகவும், ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இன் விதிகளின்படி, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சிமெண்ட் - ஏமாற்றம்
இக்கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிமெண்ட் மீதான வரிக் குறைப்பு குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் வராதது ஒட்டுமொத்த கட்டுமான துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டேக் ட்ராக்கிங் வரிக் குறைப்பு
டேக் ட்ராக்கிங் சாதனங்கள் அல்லது durable container-களில் பொருத்தப்பட்டிருக்கும் டேட்டா லாக்கர்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதன் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 0% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.
பென்சில் ஷார்பனர் வரிக் குறைப்பு
இதேபோல் பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ராப் - வரிக் குறைப்பு
ராப் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்கக் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ரப் என்பது ஒரு வகையான திரவ வெல்லமாகும், இது உத்தரபிரதேசம் மற்றும் பிற வெல்லம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு உதவும்.
பேக் செய்யப்பட்டால் 5% வரி
ராப் எனப்படும் திரவ வெல்லம் தளர்வாக (Loose) விற்பனை செய்யப்பட்டால் பூஜ்யம் ஜிஎஸ்டி வரி . ஆனால் முன்கூட்டியே பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் அது 5% வரி விதிக்கப்பட்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மீதான ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு மொழி மாற்றத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட அறிக்கை அடுத்த 5-6 நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications