உலகம் முழுவதும் டிஜிட்டல் திருட்டுகள் அதிகமாக நடக்க துவங்கியிருக்கும் வேளையில், இந்தியாவிலும் லாக்டவுன் காலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் தனது தகவல் பாதுகாப்பை மேம்படுத்திய காரணத்தால் ஹேக்கிங் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் பேமென்ட் கேட்வே சேவை வழங்கும் ஒரு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்து சுமார் 16,180 கோடி மதிப்பிலான பணத்தை மோசடி செய்ததாகக் தானே காவல் நிலையில் இந்த நிறுவனம் முக்கியமான நப்ரகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த திருட்டு ஒரே நாளில் நடக்கவில்லை, சில பல வருடங்களாக பலரின் கூட்டு முயற்சியில் யாருக்கும் தெரியாமல் நடந்துள்ளது. மேலும் இந்த மோசடியாளர்கள் கூட்டம் பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருந்து திருடியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக தானே காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கூறியது.
முதலில் நிறுவனத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு 25 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக தான் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் இதை அடிப்படையாக வைத்து விசாரணை செய்யும் போது 16,180 கோடி மதிப்பிலான பணத்தை மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பணத்தை இழந்த பேமெண்ட் கேட்வே நிறுவனம் தனது புகாரில் சஞ்சய் சிங், அமோல் ஆண்டலே என்னும் அமன், கேதார் என்னும் சமீர் திகே, ஜிதேந்திர பாண்டே மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 467, 468 (forgery), 120B (குற்றச் சதி) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜிதேந்திர பாண்டே வங்கிகளில் உறவுமுறை மற்றும் விற்பனை மேலாளராகப் பணியாற்றியவர். இந்த மோசடி கும்பல் உடன் 8-10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் மேலும் சில குற்றவாளிகள் இருப்பதாகவும், இது பல ஆண்டுகளாக நடந்து வருவதால் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை இது பாதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த பணம் ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளில் பிரித்து போடப்பட்டு, அதை மேலும் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications