இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவை துறையில் கடந்த 5 வருடத்தில் மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்து இன்று நாட்டின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஷிவ் நாடார் HCL என அழைக்கப்படும் Hindustan Computers Pvt. Limited துவங்கியதே...
கம்ப்யூட்டர் ஹார்வேர் மற்றும் அதன் இணை கருவிகளை தயாரித்து இந்தியாவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் விற்பனையாளராக உயர வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் உருவானது. ஆனால் இத்துறையில் இருக்கும் வர்த்தக தடைகள், பிரச்சனைகள் மத்தியில், மறுமுனையில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தால் இத்துறையில் நுழைந்தார் ஷிவ் நாடார்.

HCL நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரோஷினி நாடார், தனது தந்தையின் கனவை நினைவாக்கும் வகையில் வன்பொருள் துறையில் மாபெரும் முதலீட்டில் பெரும் தொழிற்சாலையை அமைக்கும் முடிவில் இறங்கியுள்ளார். இந்தியாவில் தற்போது செமிகண்டக்டர் துறையில் 360 கோணத்திலும் வாய்ப்புகள் உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துடன் ஹெச்சிஎல் டெக் இத்துறையில் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
HCL குரூப் இந்தியாவில் செமிகண்டக்டர்-க்கான அசம்பிளி, டெஸ்டிங், மார்கிங், பேகேஜிங் (ATMP) தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை 200 முதல் 300 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்து அமைக்க உள்ளதாகவும், இதற்காக அனுமதி பெற மத்திய அரசிடம் ஒப்புதல் பெற விண்ணப்பத்தை சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் MICRON நிறுவனம் சுமார் 825 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டில் குஜராத் சனந்த் பகுதியில் OSAT தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலைக்காக மைக்ரான் அடுத்த 5 முதல் 7 வருடத்தில் 2.75 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வேதாந்தா உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட பாக்ஸ்கான் தற்போது தைவான் மற்றும் ஜப்பான் நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டாடா குழுமம் பல மாதங்களாக OSAT தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வரும் வேளையில் கடந்த வாரம் பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் OSAT தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை டாடா சன்ஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இப்படி பல நிறுவனங்கள் செமிகண்டக்டர் துறையில் இறங்கும் வேளையில் 12.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹெச்சிஎல் டெக் செமிகண்டக்டர் துறையில் ATMP தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்தது முக்கியமான விஷயம். இது ஹெச்சிஎல் முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications