இந்தியாவில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போன்ற பல கோடீஸ்வரர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஷிவ் நாடார் தனது பெருந்தன்மையால் தனித்து நிற்கும் தொழிலதிபர் ஆவார். இவர் எச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைவர் ஆவர். இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த நாள் சரிந்ததால் ஷிவ் நாடார் சொத்து மதிப்பும் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. நேற்று, ஜனவரி 14, செவ்வாய்கிழமை, அவரது சொத்து மதிப்பு ரூ.46,485 கோடி குறைந்துள்ளது.
எச்சிஎல் டெக் நிறுவனத்தின் பங்கு விலை 9% குறைந்ததால் ஷிவ் நாடார் நிகர மதிப்பும் பெரும் சரிவைக் கண்டது. நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் டெக் இன் பங்குகள் டிசம்பர் 2024 காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு சரிவைச் சந்தித்தன. இதற்கு முக்கிய காரணம், சந்தை எதிர்பார்த்தபடி வர்த்தக வளர்ச்சி இல்லாததுதான்.

ஜனவரி 14, செவ்வாய் அன்று, மும்பை பங்குச் சந்தையில் பங்கு விலை 8.63% குறைந்து ரூ.1,813.95 ஆக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் பங்கு விலை 9.41% சரிந்து ரூ.1,798.40 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை 8.51% குறைந்து ரூ.1,819.95-ல் நிறைவடைந்தது. இதன் மூலம், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,92,245.28 கோடியாக சரிந்தது.
இவ்வளவு பெரிய வீழ்ச்சி இருந்தபோதிலும், ஷிவ் நாடார் நிகழ்நேர நிகர மதிப்பு $39.4 பில்லியன் அதாவது ரூ.3,40,793 கோடி என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது. 79 வயதான ஷிவ் நாடார் இந்தியாவின் மிக உயர்ந்த பரோபகாரர் ஆவார்.
நவம்பர் 2024 'EdelGive-Hurun இந்தியா தொண்டு பட்டியல்' படி, அவர் 2024 நிதியாண்டில் சமூக சேவைக்காக 2,153 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இது ஒரு நாளைக்கு ரூ.5.9 கோடியாகும். தற்போது, சந்தை தொடர்பான சொத்துக்கள் குறைந்தாலும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையிலும், நாட்டின் சமூக சேவைத் துறையிலும் ஷிவ் நாடார் ஆற்றிய பங்களிப்பு இன்னும் பேசப்பட்டு கொண்டுதான் உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications