இந்தியாவிலேயே மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான ஹெச்டிஎப்சி-யின் மிக முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை நடந்த நிலையில், இக்கூட்டத்தில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தை ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஹெச்டிஎப்சி நிர்வாகக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி, செபி மற்றும் பிற அரசு அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி
வீட்டுக் கடன் பிரிவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகவும், இப்பிரிவில் அதிகப்படியான வருவாய் லாபத்தைப் பெறும் நிறுவனமாக விளங்கும் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைவது இரு தரப்புக்கும் மிகப்பெரிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கிக்கு அதிகப்படியான நன்மை உள்ளது.
ஹெச்டிஎப்சி நிர்வாகம்
ஹெச்டிஎப்சி தனியாக இயங்கும் காரணத்தால் ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டு கடன் சேவை இல்லை, இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. தற்போது இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை இருவரும் பெற முடியும் என்பதால், இந்த இணைப்பிற்குப் பின்பு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை ஹெச்டிஎப்சி நிர்வாகம் பெற முடியும்.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி தனது வங்கி சேவையில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து ரிசர்வ் வங்கியின் தடைகளில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள நிலையில் கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற பணியாற்றி வரும் நிலையில் ஹெச்டிஎப்சி உடனான இணைப்பு புதிய சக்தியை கொடுக்கும்.
பங்கு பரிமாற்றம்
25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு 42 ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் அடிப்படையில் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரீடைல் பங்கு தாரர்களுக்கும் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்குப் பின்பு பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.
52 வார உயர்வு விரைவில்
ஹெச்டிஎப்சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் 15 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 13.56 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் இரு நிறுவனப் பங்குகளும் 52 வார உயர்வை எட்டியுள்ளது.
ஹெச்டிஎப்சி சொத்துக்கள்
இன்றைய நிலையில் ஹெச்டிஎப்சி நிறுவனத்திடம் 6.23 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான சொத்துக்களும், ஹெச்டிஎப்சி வங்கியிடம் 19.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியிடம் 6.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications