இந்திய தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான எச்டிஎஃப்சி வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 4000 முதல் 6000 வரை புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 2000 புதிய கிளைகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இலக்கு
அதிகரித்து வரும் கடன் தேவையை பூர்த்தி செய்யவும், டெபாசிட்டுக்களின் சேகரிப்பை அதிகரிக்கவும் எச்டிஎஃப்சி வங்கி இலக்காக கொண்டுள்ளது என்றும், அதற்காக அதிக கிளைகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய கிளைகள்
எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் கடந்த ஆண்டு 730 புதிய கிளைகளை திறந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 கிளைகள் திறக்கும் எண்ணம் எங்களிடம் உள்ளது என்றும், அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 புதிய கிளைகளைத் திறப்பதே தங்களது இலக்கு என்றும் எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி எச்டிஎப்சியின் பெரும்பாலான வங்கிகள் டிஜிட்டல் மயமாகி உள்ளது என்பது இந்த வங்கியின் கூடுதல் சிறப்பு ஆகும். நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளிலும் டிஜிட்டல் சேவைகளை எச்டிஎப்சி வங்கி வழங்கி வருகிறது.
டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது டிஜிட்டல் வங்கியின் நலன்கள் குறித்து கூறியதை எச்டிஎஃப்சி வங்கி பின்பற்றி வருகிறது என்றும், டிஜிட்டல் வங்கியின் பலன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைவதை உறுதி செய்ய 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் அமைக்கப்படும் என்றும் சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
மொத்த கிளைகள்
எச்டிஎப்சி வங்கியானது கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 563 புதிய கிளைகளுடன் மொத்தம் 6,342 கிளைகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மொத்த வைப்புத்தொகை மார்ச் 31 நிலவரப்படி முந்தைய ஆண்டிலிருந்து 16.8% உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications