இந்திய தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான எச்டிஎஃப்சி வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 4000 முதல் 6000 வரை புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 2000 புதிய கிளைகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இலக்கு
அதிகரித்து வரும் கடன் தேவையை பூர்த்தி செய்யவும், டெபாசிட்டுக்களின் சேகரிப்பை அதிகரிக்கவும் எச்டிஎஃப்சி வங்கி இலக்காக கொண்டுள்ளது என்றும், அதற்காக அதிக கிளைகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய கிளைகள்
எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் கடந்த ஆண்டு 730 புதிய கிளைகளை திறந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 கிளைகள் திறக்கும் எண்ணம் எங்களிடம் உள்ளது என்றும், அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 புதிய கிளைகளைத் திறப்பதே தங்களது இலக்கு என்றும் எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி எச்டிஎப்சியின் பெரும்பாலான வங்கிகள் டிஜிட்டல் மயமாகி உள்ளது என்பது இந்த வங்கியின் கூடுதல் சிறப்பு ஆகும். நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளிலும் டிஜிட்டல் சேவைகளை எச்டிஎப்சி வங்கி வழங்கி வருகிறது.
டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது டிஜிட்டல் வங்கியின் நலன்கள் குறித்து கூறியதை எச்டிஎஃப்சி வங்கி பின்பற்றி வருகிறது என்றும், டிஜிட்டல் வங்கியின் பலன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைவதை உறுதி செய்ய 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் அமைக்கப்படும் என்றும் சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
மொத்த கிளைகள்
எச்டிஎப்சி வங்கியானது கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 563 புதிய கிளைகளுடன் மொத்தம் 6,342 கிளைகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மொத்த வைப்புத்தொகை மார்ச் 31 நிலவரப்படி முந்தைய ஆண்டிலிருந்து 16.8% உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications