இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது மட்டும் அல்லாமல் வர்த்தக பிரிப்பு, நிர்வாக மாற்றம் என அனைத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முன்னிலையில் சோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று ஹெச்டிஎப்சி வங்கி பங்கு விலை ரியாக்ஷன் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஹெச்டிஎப்சி வங்கி அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் இவ்வங்கியின் அட்வான்சஸ் 57.7 சதவீதம் அதிகரித்துள்ளது, இதன் மூலம் 14.93 கோடி ரூபாயில் இருந்து 23.54 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் HDFC உடனான இணைப்பிற்கு பின்பு ஹெச்டிஎப்சி வங்கி வரலாறு காணாத வகையில் சுமார் 48000 கோடி ரூபாய் அளவிலான ஹோம் லோன் கொடுத்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி-யின் டெபாசிட் தொகை செப்டம்பர் காலாண்டில் 29.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 16.73 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 21.73 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ரீடைல் கடன் அளவுகள் 111.5 சதவீதமும், வர்த்தகம் மற்றும் கிராமப்புற கடன்கள் பிரிவில் 29.5 சதவீதமும், கார்பரேட் மற்றும் ஹோல்சேல் கடன்கள் 8 சதவீதம் வரையிலான வருடாந்திர வளர்ச்சியை அடைந்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி-யின் CASA எனப்படும் கரன்ட் அக்கவுன்ட் மற்றும் சேவிங்கஸ் அக்கவுன்ட்-ல் சுமார் 8.17 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை டெபாசிட் ஆக உள்ளது. இது முன்பு இருந்த 7.59 லட்சம் கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 7.6 சதவீத வருடாந்திர உயர்வாகும்.
ஹெச்டிஎப்சி வங்கி தலைமை நிர்வாக அதிகாரியான சஷிதர் ஜகதீஷன் தலைமையிலான நிர்வாகம் இவ்வங்கியின் சில்லறைக் கடன்களை அடமானம் மற்றும் அடமானம் அல்லாத பிரிவுகளாகப் தனித்தனியாக பிரித்துள்ளது. இப்பிரிவுகளை நிர்வாகம் செய்ய தனித்தனி தலைவர்களை நியமிக்கப்பட உள்ளனர்.
அரவிந்த் கபில் இனி அடமானக் கடன் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய உள்ளார். இதில் ஹோம் லோன், சொத்துக்களுக்கு எதிரான கடன், HDFC-யின் விற்பனை பிரிவு ஆகியவற்றை நிர்வாகம் செய்ய உள்ளார். இதேபோல் அரவிந்த் வோஹ்ரா என்பவர் அடமானம் அல்லாத கடன் பிரிவை நிர்வாகம் செய்ய உள்ளார். இதில் பாதுகாப்பற்ற கடன், சிறு வர்த்தக கடன், வாகன கடன் ஆகியவை அடங்கும்.
இதை தாண்டி பல நிர்வாக மாற்றங்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்கு பின்பு முதல் காலாண்டு முடிவுகள் இது என்பதால் அனைத்து பிரிவுகளிலும் பெரிய அளவிலான வளர்ச்சி காட்டப்பட்டு உள்ளது.
அடுத்த காலாண்டில் செப்டம்பர் காலாண்டு அளவுகளை ஒப்பிடும் போது தெளிவான நிலை முதலீட்டாளர்களாக கண்டறிய முடியும். இதேபோல் அடுத்த காலாண்டு என்பது பண்டிகை காலத்தால் அதிகப்படியான வர்த்தகம் பெற கூடிய ஒரு காலக்கட்டமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications