இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் இன்று 2.3 சதவீதம் வரையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. இது மே மாத துவக்கத்தில் இருந்து இது அதிகப்படியான அளவாகும். ஜூலை 13 முதல் வர்த்தகங்கள் நிறுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் ஜூலை 17 ஆம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 30 ஆம் தேதி தான் ஹெச்டிஎப்சி-யின் கடைசி நிர்வாக குழு கூட்டமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிஐ ஏப்ரல் மாதம் சில தளர்வுகளை அளித்து இணைப்பை எளிதாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய கார்பரேட் சந்தையில் மிகப்பெரிய இணைப்பாக பார்க்கப்படும் HDFC - HDFC Bank இணைப்பு கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC-ஐ 40 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு இந்த இணைப்பு கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிதியியல் கூட்டமைப்பாக உருவெடுப்பது மட்டும் அல்லாமல் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிடப்படுகிறது. இந்த இணைப்பை தொடர்ந்து ஒவ்வொரு 25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு 42 புதிய ஹெச்டிஎப்சி வங்க பங்குகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 740000 ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications