இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கோவிட் வேக்சின் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான மருந்து/மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் எனப் பல மாநிலங்கள் கேள்விகேட்டு வரும் நிலை. சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இதற்கான தீர்வுகள் முழுமையாக எட்டவில்லை.

இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசியது குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிடிஆர் அனைத்திற்கும் சரியாகப் பதில் அளித்தார்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது டிவிட்டரில் ஜிஎஸ்டி-ஐ புரிந்துகொள்வதற்கு 10 பாயிண்ட்களைக் குறிப்பிட்டு உள்ளார்.
ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீ ட்-ல்
1. ஜிஎஸ்டி ஒரு நல்ல யோசனையாகத் தொடங்கியது
2. பாஜக அதை மோசமான சட்டமாக மாற்றியது
3. பயங்கரமான வரி விகிதங்களுடன் அறிவிக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்டது.
4. நரிகளை வேட்டையாடுவதைப் போல வரி வசூலிக்கும் அதிகாரிகள் சட்டத்தைப் பயன்படுத்தினர்
5. ஒவ்வொரு தொழிலதிபரும் வரி ஏய்ப்புச் செய்பவர் எனச் சந்தேகிக்கப்பட்டது ஜிஎஸ்டி குழு
6. ஜிஎஸ்டி கவுன்சில் வெறும் பேசும் கடையாகக் குறைந்தது
7. ஜிஎஸ்டி அமலாக்கக் குழு (அதிகாரிகளை உள்ளடக்கியது) நாய் அசைக்கும் வால் போல ஆனார்கள்
8. நிதியமைச்சகம் அமைச்சர்கள் குழுவை (GoM) தனது NDA மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளின் விரிவாக்கமாக்க நடத்தத் துவங்கியது
9. மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தும் அனைத்து நிதியமைச்சர்களும் தவறான பள்ளி மாணவர்களாகக் கருதப்படுகிறார்கள்
10. கடைசியில் ஜிஎஸ்டி ஐடியா இறந்தது.


Click it and Unblock the Notifications