ஹை டெக் பைப்ஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி பைப் தயாரிப்பு நிறுவனமாகும். ஸ்மால்கேப் பிரிவை சேர்ந்த இந்நிறுவனம் ஸ்டீல் பைப்ஸ்,ஜிஐ பைப்ஸ் மற்றும் ஜிபி பைப்ஸ் போன்ற பல வகையான பைப்புகள் மற்றும் ரூபிங் ஷீட்டுகள் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது மற்றும் இந்நிறுவன பங்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கி வருவது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவன பங்குக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஹை டெக் பைப்ஸ் நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.
நிபுணர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் ஹை டெக் பைப்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.19.15 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 34 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.14.33 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.761 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.

நீண்ட கால அடிப்படையில் ஹை டெக் பைப்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்க நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 608 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் குறுகிய கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது. கடந்த 3 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 33 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 28 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹை டெக் பைப்ஸ் பணியாளர் நல அறக்கட்டளையின் அறங்காவலரான மனோஜ் குமார் குப்தா ஓப்பன் மார்க்கெட் வாயிலாக அந்நிறுவனத்தின் 26,000 பங்குகளை வாங்கியுள்ளார். இந்த தகவலை ஹைடெக் பைப்ஸ் நிறுவனம் இன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இந்த தகவல் வெளியானதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 3 சதவீதம் உயர்ந்து ரூ.114வரை சென்றது.
2024 செப்டம்பர் 23ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.210.75ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கு தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. நேற்று பங்குச் சந்தையில் வர்ததகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.110.50ஆக இருந்தது. தற்போது இப்பங்கு அதன் உச்ச விலையை காட்டிலும் 45 சதவீதம் குறைவாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications