அதிக பணம் சம்பாதிக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உரிமையாளர் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டு ரெட்டிட் தளத்தில் ஒரு பயனர் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என பதிவு செய்துள்ளார்.

பெயர் பதிவு செய்யப்படாத அந்த ரெடிட் பயனர், ஒரு நல்ல தொழிலை தொடங்கி நடத்தி வரும் நபராக இதை நான் கூறுகிறேன் என கூறியுள்ளார். புதிதாக கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் புதிதாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது பொருத்தமான இடம் அல்ல என பதிவு செய்திருந்தார்.
ஒரு தொழிலில் நாம் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசு அதிகாரிகளோடு தொடர்பு இருக்க வேண்டும், அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்க வேண்டும் என முட்டாள்தனமான விதிமுறைகள் இந்தியாவில் இருக்கின்றன, இவை கண்டுபிடிப்பாளர்களை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்கின்றன என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தங்களுடைய செயலி வழியாக நிகழ்ந்த ஒரு மோசடி வழக்கில் சரியான முறையில் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தரவும் காவல்துறைக்கு நாங்கள் உதவினோம், ஆனால் அந்த வழக்கில் காவல்துறையினர் எங்களை விடுவிப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் சாலை உள்கட்டமைப்புகள் ,மருத்துவ உள்கட்டமைப்புகள் போன்றவை கூறும்படியாக இல்லை என தெரிவித்துள்ளார்.. இந்தியாவை விட்டு ஐக்கிய அரபு அமீரகம் அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று விடுங்கள் ஏனெனில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்காக அரசு பாப்கார்னுக்கு கூட ஜிஎஸ்டி விதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டாலும், அதன் கீழ் மற்ற ரெடிட் பயனாளர்கள் வெளியிட்ட கருத்துகள் இன்னும் காட்டுகின்றன. ஏன் அந்த பதிவு நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவருடைய இந்த பதிவுக்கு பல தரப்பு கருத்துக்களும் வந்துள்ளன.
இந்தியாவில் அதிகப்படியான வரி வசூல் செய்யப்படுகிறது ஆனால் அதற்கு ஏற்ற வகையில் சாதாரண மக்களுக்கு சாலை போக்குவரத்து வசதி, சுகாதார வசதி , உள்கட்டமைப்பு என எந்த வசதியும் ஏற்படுத்தி தரவில்லை, ஆனால் ஊழலும் மாசும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications