வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் புதன்கிழமை முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் படி மக்களை ஏமாற்றும் பில்டர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இப்புதிய திட்டம் அடுத்தச் சில மாதங்களில் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பில்டர்கள்

பில்டர்கள்

பொதுவாகப் பில்டர்கள் மக்களிடம் தங்களது வீடுகளை வேகமாக விற்பனை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகப் பல பொய்களைக் கூறி விற்பனை செய்வார்கள். இதில் முக்கியமான ஒன்று டெலிவரி டைம்.

டெலிவரி டைம் என்பது குறித்த நாளுக்குள் பில்டர்கள் கூறிய படி வீட்டின் கட்டுமான பணிகளை முடித்து வாடிக்கையாளர்கள் கையில் சாவியைக் கொடுக்க வேண்டும்.

 

பில்டர்கள்

பில்டர்கள்

பில்டர்கள் காலந்தாழ்த்துவது தற்போது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது பில்டர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் வங்கியிலோ அல்லது வெளியிலோ கடன் பெற்று வீடு வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சனை, இதைப் பிரச்சனை என்பதை விடவும் சுமை என்று கூறலாம்.

 

எஸ்பிஐ திட்டம்

எஸ்பிஐ திட்டம்

இந்தப் பிரச்சனையால் பல கோடி மக்கள் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்தப் பிரச்சனையை உணர்ந்து கொண்டு மக்களுக்குப் போதிய பாதுகாப்புகளை அளிக்க வேண்டும் எனப் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் படி பில்டர்கள் தங்களது திட்டத்தைச் சரிவர முடிக்கவில்லை எனில் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்குத் தங்களது அசல் தொகையை முழுவதுமாகத் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. (ஆனால் வட்டி திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. )

 

அப்பார்ட்மென்ட்

அப்பார்ட்மென்ட்

தற்போது இத்திட்டம் அப்பார்ட்மென்ட்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. அதுவும் எஸ்பிஐ வங்கி அந்தத் திட்டத்திற்கு sole lender ஆக இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் செல்லுபடியாகும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பில்டர்களுக்கு நெருக்கடியும், மக்களுக்கு நம்பிக்கையும் கொடுத்துள்ளது.

 

எஸ்பிஐ வங்கி வர்த்தகம்

எஸ்பிஐ வங்கி வர்த்தகம்

தற்போது எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் திட்டத்தின் கீழ் சுமார் பில்டர்களுக்குப் பெரிய அளவில் கடன் கொடுப்பதில்லை, மக்கள் வாயிலாகத் தான் தங்களது வீட்டு கடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 5000 கோடி ரூபாய் வரையில் பில்டர்களுக்கு எஸ்பிஐ கடன் கொடுத்துள்ளது. இது எஸ்பிஐ வங்கியின் மொத்த 2.248 லட்சம் கோடி ரூபாய் கடன் வர்த்தகத்தில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home loan customers will get refund if builder delays project

The State Bank of India (SBI) on Wednesday launched a scheme for its home loan customers, wherein it guarantees the refund of the principal amount if a builder fails to complete the project within the stipulated time.
Story first published: Thursday, January 9, 2020, 11:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X