சுபிக்‌ஷா ஞாபகம் இருக்கா உங்களுக்கு..? அதன் நிறுவனர் சி.ஆர்.சுப்பிரமணியன் நிலைமை என்ன தெரியுமா..?

ஒன்றுமே இல்லாமல் தொழிலை தொடங்கி படிப்படியாக விரிவாக்கம் செய்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பல்வேறு தொழில் முனைவோர்களின் கதைகள் இந்தியாவில் இருக்கின்றன. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் தொடங்கி பெரிய நிலைக்கு வந்தவர்களில் சிலர் விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நிதி சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை இழக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நபரின் கதை தான் இது.

சி.ஆர்.சுப்பிரமணியன் ஒரு காலத்தில் புகழ்பெற்ற தொழில் முனைவராக இவர் இருந்தார். பொறியாளர், வங்கி ஊழியர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்ட நபர் தான் சி.ஆர்.சுப்பிரமணியன். தற்போது இவர் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வருகிறார். ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் தான் சி.ஆர். சுப்பிரமணியன். இங்கே பொறியியல் பிரிவில் இளநிலை படிப்பை முடித்த இவர் பின்னர் ஐஐஎம்-இல் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

சுபிக்‌ஷா ஞாபகம் இருக்கா உங்களுக்கு..? அதன் நிறுவனர்  சி.ஆர்.சுப்பிரமணியன் நிலைமை என்ன தெரியுமா..?

சில காலம் பொறியாளராகவும் சில காலம் வங்கியிலும் வேலை செய்த அனுபவம் இவருக்கு உண்டு. 1991 ஆம் ஆண்டு விஸ்வபிரியா என்ற நிதி சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனத்தை தொடங்கினர். பல்வேறு வகையான நிதி சார்ந்த திட்டங்களை மக்களிடம் விளம்பரம் செய்து அவர்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக திரட்டினார் .இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து 1997 ஆம் ஆண்டு சுபிக்ஷா என்ற ஒரு சில்லறை விற்பனை தொழிலை நிறுவினார்.

படிப்படியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவருடைய சுபிக்ஷா கடைகள் விரிவடைய தொடங்கின. பின்னர் இந்தியா முழுவதும் 1600 இடங்களில் சுபிக்ஷா சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. 4000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நபராக இவர் மாறினார்.ஆனால் பின்னர் தான் இவருக்கு பிரச்சினையே ஏற்பட்டது. இவர் தன்னுடைய விஸ்வ பிரியா நிதி சேவை நிறுவனத்திற்காக பலரிடமிருந்து டெபாசிட் பெற்று கொண்டு அந்த பணத்தை வெளிநாட்டில் இருக்கும் ஷெல் நிறுவனங்களுக்கு அனுப்பி பல கோடி ரூபாய்க்கு மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தான் இவருடைய மோசடி வெளி வந்தது. இந்த சூழலில் அவர் மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு 2023 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

கிட்டத்தட்ட 137 கோடி ரூபாயை அவர் ஏமாற்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் சுப்பிரமணியத்திடம் இருந்து இந்த பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தர வேண்டும் என அறிவித்தது.

Take a Poll

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+