டெல்லி: தங்கம் நமது வாழ்க்கை முறையில் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கக்கூடிய ஒரு உலோகம். தங்கத்தை நகைகளாகவோ அல்லது காயின்களாகவோ அவ்வப்போது வாங்கி சேர்த்து வைக்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.
வீட்டில் ஒரு நல்ல விசேஷம் வரும்போது அல்லது பண்டிகை நாட்களில் நியாபகார்த்தமாக தங்கம் வாங்கி வைப்பவர்கள் அதிகம். அதே போல நமது கொண்டாட்டங்களிலும் தனிப்பட்ட வீட்டு நிகழ்வுகளிலும் தங்க நகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இந்நிலையில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைக்கலாம் இதற்கென ஒரு வரம்பு உள்ளதா ,இதற்கு வருமான வரி கணக்கை காட்ட வேண்டுமா என பல்வேறு சந்தேகங்கள் எழக்கூடும். அதற்கு இந்த கட்டுரையில் நாம் விடை காணலாம்.
தங்கத்தை நகைகள், காயின்கள், பார்கள் ஆகிய பிசிக்கல் முறையிலும், தங்கப் பத்திரம் , ஈடிஎஃப் என டிஜிட்டல் முறையிலும் நாம் வாங்க முடியும். இருப்பினும் இதில் பெரும்பாலானவர்கள் நகைகள் மற்றும் காயின்களையே வாங்குவார்கள். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையின் படி, இந்தியாவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்:
1.திருமணமாகாத பெண் 250 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
2. திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
3. திருமணமாகாத மற்றும் திருமணமான ஆண் 100 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க முடியும்.
ஒரு வீட்டில் எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள் இருக்கின்றனரோ அதற்கு ஏற்ப கிராம்களை பிரித்து கொண்டு கணக்கு காட்டலாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்னவென்றால் இத்தனை கிராம் வரை நகைகள் வைத்திருந்தால் அதற்கு எந்த ஒரு வருமான கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
பொதுவாக வருமான வரித்துறை ஒவ்வொரு வீடாக சென்று எவ்வளவு நகை இருக்கிறது என ஆய்வு செய்யப் போவதில்லை. ஆனால் ஒருவேளை வருமான வரி சோதனை நடைபெறுகிறது அப்போது குறிப்பிட்ட வரம்பை மீறி தங்கம் இருந்தால் அதற்கான வருமானம் எப்படி கிடைத்தது என்ற கணக்கை தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் வருமான வரி துறை அதனை பறிமுதல் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி விவசாய வருமானம், பரம்பரை பணம், ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் ஆகியவற்றுக்கு எந்த வரியும் கிடையாது. ஆனால் இந்த வரம்புக்கு மீறிய தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது அதற்கு கணக்கு காட்டியாக வேண்டும்.
அதே வேளையில் தங்கம் வாங்கிய மூன்று ஆன்டுகளுக்குள் விற்கப்பட்டால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியை அரசாங்கம் விதிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்யும் போது அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |



Click it and Unblock the Notifications