சமீபத்திய நாட்களில் மோசடி குறித்த செய்திகளை அதிகளவில் பார்த்து வருகிறோம். இந்தப் பதிவிலும் ஒரு மோசடி சம்பவத்தைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம். 25 வயதான ஐஐடி மாணவர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ரூ.7.29 லட்சத்தை இழந்துள்ளார். படித்த நபர்களே இப்படி ஏமாறும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அந்த மாணவரிடம் மோசடி கும்பல் பணம் பறித்துள்ளனர்.
மோசடி எப்படி தொடங்கியது?: ஜூலை மாதம் ஆள் பெயர் தெரியாத நபரிடமிருந்து ஐஐடி மாணவருக்கு அழைப்பு வந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு அதிகாரி (TRAI) போல காட்டிக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அந்த மாணவரின் மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட்டதாக கூறி பேசியுள்ளார். இதனால் 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மாணவரின் மொபைல் நம்பர் செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க காவல்துறையிடம் இருந்து NOC பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். பேசிக்கொண்டே மோசடிக்காரர் மற்றொரு நபருக்கு மொபைலை வழங்கினார். அவர் போலீஸ் அதிகாரி போல உடை அணிந்து கொண்டு வாட்ஸ் அப் வீடியோ காலில் தோன்றி மாணவரிடம் பேசினார்.
பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். அதற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கைது நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்ப்பதற்கு UPI மூலம் 29,500 ரூபாய் அனுப்பும் படி மாணவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவரைப் பின்னர் டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்பது ஒரு தனி அறைக்குள் செய்யாத குற்றத்திற்காக அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களையே தனியாக இருக்கும்படி மிரட்டி பணம் பறிக்கும் புதிய யுக்தி. இந்த சம்பவத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. அடுத்த நாள் மோசடி செய்பவர்களிடமிருந்து மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதிக பணம் செலுத்தும் படி கூறியுள்ளனர். அதோடு அந்த மாணவரின் வங்கி விவரங்களையும் கேட்டுள்ளனர்.
வங்கி விவரங்களை வைத்து அந்த மாணவரின் அக்கவுண்டில் இருந்து பணத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. பிறகு அந்த ஐஐடி மாணவர் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது குறித்து அந்த மாணவருக்கு தெரிய வந்தது. அதுவரை மோசடிக்காரர்கள் சொல்வதற்கெல்லாம் இணங்கிய அவர், அலறியடித்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
நம்பர் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறும் போதே நடந்த விஷயம் குறித்து குடும்பத்தார் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்திருந்தால் இவ்வளவு பெரிய நிதி இழப்பு ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம். மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். விழிப்புணர்வை தவிர இது போன்ற மோசடிகளை நிறுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications