ஹரியாணா மாநிலம் குருகிராம் தான் பிரியாணி பை கிலோ உணவுச் செயினின் தாயகம். 2015 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்தப் பிராந்தியத்தில் பிரியாணி பை கிலோ பிரியாணி மிகவும் பிரபலமானது. ஐஐடி புவனேஷ்வரில் படித்த விஷால் ஜிண்டால் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அவருக்கு சொந்த ஊர் ஆக்ரா.
எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங்கில் நல்ல லாபத்தைப் பார்த்து வந்தபோதும் விஷால் ஜிண்டாலின் மனது வேறு மாதிரி யோசித்தது. லோக்கல் உணவை ஒரு தேசிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்பது தான் விஷாலின் விருப்பமாகும். ஆக்ராவில் இருந்த உணவு மார்க்கெட்டைப் பார்த்து அவரது எண்ணம் மேலும் வலுத்தது.

2015 ஆம் ஆண்டில் தனது நண்பர் கௌஷிக் ராயுடன் சேர்ந்து பிரியாணி தொழிலை ஆரம்பித்தார். இதற்காக அவரது நண்பர்களும், உணவுத் துறை அனுபவமுள்ளவர்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் விஷால் ஜிண்டால் கவலைப்படாமல் பிரியாணியை பான் இந்தியா அளவில் பிரபலப்படுத்தும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
அவரது தந்தையின் பெரும் ஆதரவுடன் விஷால் தனது பிரியாணி பை கிலோ நிறுவனத்தை டெலிவரி சார்ந்ததாக உருவாக்கினார்.
அந்த நிறுவனம் இப்போது வகை வகையான தம் பிரியாணிகள், கபாப்கள், குருமா போன்ற உணவு ஐட்டங்களைத் தயாரித்து விற்கிறது.
விஷால் நிறுவனத்தின் பிரியாணியில் உயர்தரமான பாஸ்மதி அரிசியை பயன்படுத்துகின்றனர்.
இந்தியா முழுவதும் 45க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரியாணி பை கிலோ நிறுவனம் செயல்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே அந்த நிறுவனம் நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் 18 கிளைகளில் இருந்து மாதம் ரூ.3 கோடி வருமானம் வந்தது.
இந்த நிலையில் தனது தொழிலை விரிவுபடுத்த நினைத்த ஜிண்டாலுக்கு IvyCap என்ற நிறுவனத்தின் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாகக் கிடைத்தது. கொரோனா கால முடக்கத்தின்போது பலரது பசியை பிரியாணி பை கிலோ நிறுவனம் தனது டெலிவரிகளின் மூலம் ஆற்றியது.
2023 நிதியாண்டில் பிரியாணி பை கிலோ நிறுவனத்தின் வருமானம் ரூ.221.75 கோடி என்று போர்ப்ஸ் இந்தியா கணக்கிட்டுள்ளது.
2024 நிதியாண்டில் தனது நிறுவனத்தை ரூ.1000 கோடி லாபத்தை எட்டும் என்று விஷால் ஜிண்டால் நம்புகிறார். இந்தியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் தனது நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications