அரசியின் விலை 2023 ஆம் ஆண்டில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் காரணத்தால் இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசியின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம் உலகளவில் இருக்கும் இந்திய மக்களும், அரிசியை முக்கிய உணவாக கொண்டு இருக்கும் சீனா மற்றும் தென்கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது. வியாழக்கிழமை மத்திய அரசின் இந்த முக்கிய அறிவிப்புக்கு காரணம், பருவமழை தாமதமாகத் தொடங்கிய பின்னரும், வட இந்தியாவில் அதிகப்படியான மழை ஆகியவற்றின் காரணமாகவும் அரிசியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

உலகளாவிய அரிசி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் அதிகம், இந்த ஒரு அறிவிப்பின் மூலம் உலக நாடுகள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும், இந்தியாவின் முக்கியதுவத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே தக்காளி, இஞ்சி, பருப்பு வகைகள் விலை உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அரிசி விலை உயரும் நிலைக்கு தள்ளப்பட கூடாது என்பதற்காக மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் சுமார் 55.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் அளவிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி பங்கு 2022 இல் 22.2 மில்லியன் டன்கள். இது இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் இருக்கும் நான்கு பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை விடவும் அதிகமாகும்.
இந்தியா தற்போது 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசியை வாங்கும் நாடுகளின் பட்டியலில் பெனின், பங்களாதேஷ், அங்கோலா, கேமரூன், ஜிபூட்டி, கினியா, ஐவரி கோஸ்ட், கென்யா மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளது. இதேபோல் ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இந்தியாவில் இருந்து அதிகளவில் பிரீமியம் பாசுமதி அரிசியை வாங்குகின்றன.
இந்தியா 2022 இல் சுமார் 17.86 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் அரிசி விலையை கட்டுப்படுத்த செப்டம்பர் 2022 இல், உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது மற்றும் பல்வேறு தர அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்தது.
2022 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் டன் பாசுமதி அரிசி மற்றும் 7.4 மில்லியன் டன் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது மத்திய அரசு இவ்விரு அரிசி வகைகளுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்திய விவசாயிகள் வருடத்திற்கு இரண்டு முறை நெல் பயிரிடுகிறார்கள், 2022 - 23 ஆண்டில் சுமார் 135.5 மில்லியன் டன்களாக இருந்த மொத்த அரிசி உற்பத்தியில் 80 சதவீத பங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் கோடையில் பயிர் நடவு மூலம் கிடைக்கிறது. குளிர்காலத்தில் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் முக்கிய மாநிலங்கள்.
இந்தியாவில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்க திட்டமிட்டு மத்திய அரசு இந்தியா விவசாயிகளிடமிருந்து புதிய பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை 7 சதவீதம் உயர்த்தி 100 கிலோவுக்கு 2,183 ரூபாயாக உயர்த்தியது. ஆனால், 2023ல் பருவமழை பொய்த்துப் போனதால், நெல் சாகுபடி பரப்பு கணிசமாக குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்ட நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் அரிசிக்காக முட்டிமோதி கடைகளில் வாங்குகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் பிரபலான பட்டேல் பிரதர்ஸ் கடையில் இந்திய மக்கள் அரிசி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உருவாகுமோ என்ற அச்சத்தில் முட்டிமோதி இக்கடையில் அரிசி வாங்குவது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications