நம் நாட்டில் அரிசி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பாசுமதி அரிசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பருவமழை தாமதத்தால் அரிசி உற்பத்தி குறையும் என்ற அச்சம் மற்றும் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்தது.

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 1,200 டாலர் என மத்திய அரசு நிர்ணயம் செய்தது. அதாவது இந்த அடிப்படை விலைக்கு குறைவாக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய முடியாது. மத்திய அரசின் நடவடிக்கையால் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். புதிதாக சாகுபடி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வந்தவுடன், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்கும் என்று விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தனர்.
புதிய பாசுமதி அரிசி வரவால் உள்நாட்டில் விலை குறையும் என்பதால் மத்திய அரசு பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (டன்னுக்கு) 1,200 டாலரிலிருந்து 950 டாலராக குறைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 14ம் தேதியன்று அடுத்த அறிவிப்பு வரும் வரை குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம் இருக்காது என்று அரசு தெரிவித்தது. இருப்பினும் பின்னர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை தீவிரமாக பகுப்பாய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பாசுமதி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை குறைத்தால் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று வர்த்தக அமைப்புகள் தெரிவித்தன.
இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் கார்க் கூறுகையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை பாசுமதி ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதித்ததால் ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளிடமிருந்து அரிசி வாங்குவதை நிறுத்தி விட்டனர். பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை குறைக்கும் முடிவு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் என்று தெரிவித்தார். ஹரியானாவை சேர்ந்த முன்னணி ஏற்றுமதியாளரான விஜய் சேடியாக கூறுகையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை குறைக்கும் முடிவு பாசுமதி அரிசியின் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க உதவும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications