சுமார் 140 கோடி மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நம் நாட்டில் பெரிய தொழிலாளர் படை உள்ளது. ஆனால் வேலைவாய்ப்புதான் குறைவாக உள்ளது. வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், நம்மவர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கில், வளர்ந்த நாடுகளுடன் வேலை ஒப்பந்தங்களுக்கு மத்திய அரசு தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இது இரு தரப்புக்கும் வெற்றியை அளிக்கும்.

இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் நாடுகள் தங்களது நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும். அதேசமயம் நம் நாட்டிலும் வேலையின்மை விகிதம் குறையும், வெளிநாட்டு பணம் அனுப்பும் திறனும் அதிகரிக்கும்.
தற்போது வரை இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 13 நாடுகளுடன் இது போன்ற ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு பதிலாக இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த விரும்புவதாக அண்மையில் இஸ்ரேல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தைவானுக்கு 1,00,000 பேரை வேலைக்கு அனுப்புவற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் தைவான் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் கொண்ட சமூகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். அதனை உறுதி செய்வது போல் அந்நாட்டில் வேலையின்மை விகிதம் அடிமட்ட அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் நிலவும் தொழிலாளர் இடைவெளியை (பற்றாக்குறை) நிரப்ப இந்தியா விரும்புகிறது.
அதேசமயம் தைவானும் இந்திய தொழிலாளர்களுக்கு உள்ளூர் மக்களுக்கு இணையான ஊதியம் மற்றும் காப்பீடு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய தொழிலாளர்கள் உடல்நலம் தொடர்பான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதம் இரு நாடுகளும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சியும், இந்தியா-தைவான் வேலை ஒப்பந்தம் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியா 1,00,000 பேரை தைவானுக்கு வேலைக்கு அனுப்பும். அங்கு மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
அதேவேளையில், தைவானை தங்களது ஒரு பகுதி என்று கூறிவரும் சீனாவுக்கு இந்தியாவின் இந்த நடவடிக்கை எரிச்சலை கிளப்பும். இருப்பினும், தைவான்-இந்தியா வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தவொரு விதத்திலும் ஒரே சீனா கொள்கையை மீறவில்லை என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications