2.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே லாபகரமாக துவங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் சாதகமான அமைந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்காத வகையில் சரியாக 10.15 மணி அளவில் நிப்டி குறியீடு 14,820 புள்ளிகளில் அப்படியே நின்றுபோனது.

நிப்டி, பேங்க் நிப்டி உட்பட அனைத்து நிஃப்டி குறியீடுகளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய நிலையில் தேசிய பங்குச்சந்தை வர்த்தக பரிமாற்றங்களை கணக்கிட முடியாமல் தடைபெற்றது. இதேவேளையில் மும்பை பங்குச்சந்தை எவ்விதமான தடையும் இல்லாமல் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை பல டெலிகாம் இணைப்புகளுடன் இயங்கி வருகிறது, இந்நிலையில் என்எஸ்ஈ-க்கு டெலிகாம் சேவை அளிக்கும் இரு நிறுனங்களின் இணைப்புகளும் ஓரே நேரத்தில் முடங்கியது தான் புதன்கிழமை வர்த்தக பாதிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை தேசிய பங்குச்சந்தை இன்ஜினியர்கள் லீஸ் லைனில் தரவுகள் பரிமாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கண்டுப்பிடித்த நிலையில் இதற்கு காரணம் டெலிகாம் இணைப்பில் ஏற்பட்ட தடை தான் என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வர்த்தகம் தடைபெற்ற 1 மணிநேரத்தில் வர்த்தகம் முழுமையாக முடக்கப்பட்டு 3.45 மணிக்கு மீண்டும் வர்த்தகம் துவங்கப்படும். தேசிய பங்குச்சந்தைக்கு டெலிகாம் இணைப்பை அளிக்கும் பார்தி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ் இணைப்புகள் ஓரே நேரத்தில் முடங்கிய காரணத்தால் தான் வர்த்தகம் முடங்கியுள்ளது.
இந்நிலையில் பங்குச்சந்தை வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையமான செபி, வர்த்தக முடக்கம் குறித்து விரிவாக ஆய்வறிக்கையை தேசிய பங்குச்சந்தையிடம் கோரியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமைக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications