இந்திய பங்கு சந்தை கடந்த ஒரு வார வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணமாக இஸ்ரேல் மற்றும் சீன சந்தைகள் விளங்குகிறது. சென்செக்ஸ் குறியீடு வெறும் ஐந்து நாட்களில் 4,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, மும்பை சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பை அதிர்ச்சியூட்டும் வகையில் 16 லட்சம் கோடி ரூபாயை இழக்க செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 30 பங்குகளைக் கொண்ட BSE சென்செக்ஸ் குறியீடு 809 புள்ளிகள் அல்லது 0.98% சரிந்து, 81,688.4 புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், பரந்த NSE நிஃப்டி 200 புள்ளிகள் அல்லது 0.79% சரிந்து, 25,050 புள்ளிகளில் முடிந்தது.

ஈரான்-இஸ்ரேல் மோதல் அதிகரித்து வருவதும், சீனாவின் 140 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்பு ஆகியவை இணைந்து இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டை வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையில் பொதுவாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம், அந்த வகையில் சீன பங்குச்சந்தை பல ஆண்டுகளுக்குப் பின்பு கவர்ச்சிகரமானதாக மாறியிருக்கும் வேளையில் முதலீட்டாளர் இந்தியச் சந்தையைத் துடைத்துவிட்டு அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல், கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய சப்ளை செயினில் கணிசமான தாக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது அனைத்தும் இணைந்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து மூலதன வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்திய பங்குச்சந்தையில் தங்களுடைய பங்கு இருப்பை விற்பதில் தீவிரமாக உள்ளனர். கடந்த நான்கு வர்த்தக நாளில் வியாழக்கிழமை வரையில் கிட்டத்தட்ட 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திங்களன்று 15,243 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர், இதுதான் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரே நாளில் அதிகபட்ச வெளியேற்றத்தைக் குறிக்கிறது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications