உலக அளவில் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய மக்கள் வசிக்கும் நாடு இந்தியா. இங்கே சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நிமிடமும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் , பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தளங்கள் மக்களின் அன்றாட பொழுதுபோக்கு ஊடகங்களாக மாறிவிட்டன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாக்டவுன் போடப்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர. அந்த சமயத்தில்தான் இந்தியாவில் இந்த சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலம் அடைய தொடங்கின. தற்போது பல்வேறு நபர்கள் தொழில் புரிவதற்கும் அன்றாட வேலைகளுக்குமே சமூக வலைத்தளங்களை முக்கியமான ஒரு ஊடகமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைதள பயன்பாடு பல்வேறு சாதகங்களை கொண்டிருந்தாலும் அதற்கேற்ப பல்வேறு பாதகங்களையும் கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் அரங்கேறுகின்றன. இந்த சூழலில் தான் சமூக வலைதள பயன்பாட்டிற்கும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய்திருக்கிறது. மத்திய உள்துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் சைபர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நாடாளுமன்ற குழு ஒரு அறிக்கையை வழங்கி இருக்கிறது.
அந்த அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சமூக வலைதள பயன்பாடுகளுக்கும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி சமூக ஊடகங்கள் , டேட்டிங் செயலிகள் மற்றும் கேமிங் பிளாட்பார்ம்களை பயன்படுத்துவோரின் வயது மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறது. இதன் மூலம் யாரும் தவறான செயல்களில் ஈடுபடுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்பதால் அதுபோன்ற நடவடிக்கைகள் குறையும் என பரிந்துரை செய்திருக்கிறது.
இதன் மூலம் போலியான புரோஃபைல்களை கண்டறியலாம் , சைபர் ஸ்டாக்கிங் , சைபர் கிரைம் உள்ளிட்டவற்றை கண்டறியலாம் ஆன்லைன் வழியாக பெண்களுக்கு தொந்தரவு தருபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட புரோஃபைல் மீது அடிக்கடி புகார்கள் வருகிறது எனும் போது இந்த சமூக ஊடகங்களை செயல்படுத்தக்கூடிய நிறுவனங்கள் மீண்டும் கேஒய்சி சரிபார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
டேட்டிங் மற்றும் கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது அதற்கு உரிய வயதில் தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் அவர்களின் வயது சரி பார்ப்பதை கட்டாயம் என கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறது இந்த விதிமுறைகளை பின்பற்றாத சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
அடையாளத் திருட்டு, ஆன்லைன் தொந்தரவு , தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது உள்ளிட்டவற்றை தடுக்க இது அவசியம் என நாடாளுமன்ற குழு கேட்டுக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தளங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்றால் இந்த கேஒய்சி நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு இந்த பரிந்துரை ஏற்று சட்டமாக்கினால் அனைத்து புரோபைல்களுக்கும் கேஒய்சி கட்டாயமாக்கப்படும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications

