இந்தியாவில் சமூக தொண்டு பணிகளை அதிகளவில் கெளதம் அதானி மேற்கொண்டு வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சமூக தொண்டுக்கான பதிவினை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கெளதம் அதானி முதலிடம் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
நடப்பு ஆண்டில் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடிய கெளதம் அதானி, 60வது பிறந்த நாளில் 60,000 கோடி ரூபாய் நன் கொடையை அறிவித்தார்.
எதற்காக நன்கொடை
இந்த நன்கொடை மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு என பலவற்றையும், அதானி அறக்கட்டளை மூலம் உதவி செய்யும் என்று அறிவித்தார். அதானி அறக்கட்டளை ஏற்கனவே பல்வேறு வகையான சேவைகளை செய்து வருகிறது. தொடர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக சேவை செய்து வரும் இந்த அறக்கட்டளை, 3.7 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு உதவி செய்துள்ளது.
கெளதம் அதானி & ஷிவ் நாடார்
கெளதம் அதானியின் இந்த அறிவிப்பால், இன்று நன்கொடை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அதானி. இதே அடுத்த இடத்தில் ஹெச் சி எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார். ஷிவ் நாடார் அறக்கட்டளையின் தலைவரும் ஆவார். இவரும் தொடர்ந்து தனது அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருகின்றார்.
அசோக் சோட்டா
80வயது இளைஞரான அசோக் சோட்டா, கடந்த ஆண்டு குறிப்பிட்ட மருத்துவ துறைக்கான ஆராய்ச்சி மையத்திற்காக 600 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய தொழிலதிபரான பிரமல் வாசுதேவன் மற்றும் அவரின் மனைவி சாந்தி காண்டியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஷிவ் நாடார் எவ்வளவு?
ஷிவ் நாடார் தனது சொத்து மதிப்பில் சுமார் 1 பில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த ஆண்டு சுமார் 11,600 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த அறக்கட்டளையும் 1994ல் தொடங்கப்பட்டது. ஹெச் சி எல் என்ற மிகப்பெரய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஷிவ் நாடார், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றை நிறுவதற்காக உதவி செய்தும் வருகின்றார்.
பதவி விலகல்
கலை கலாச்சாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேவைகளையும் செய்து வருகின்றார். கடந்த ஆண்டில் ஹெச் சி எல் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகிய ஷிவ் நாடார், அவரின் மகள் ரோஷினி நாடாரை பதவியில் அமர்த்தினார்.
பிரமல் வாசுதேவன் & சாந்தி காண்டியா
இதே அசோக் சோட்டாவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டில் மருத்துவ ஆய்வுக்காக 600 கோடி ரூபாயினை கொடுத்தார்.
பிரமல் வாசுதேவன் மற்றும அவரது மனைவி சாந்தி காண்டியா ஆகியோர், 2018ல் இணைந்து நிறுவிய லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் தான் Creador Foundation. இந்த அறக்கட்டளை மூலமாக மலேசியா மற்றும் இந்திய சமூகங்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.