டெல்லி : கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நஷ்டம் 2,253.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாகும்.
இதுவே கடந்த 2018 - 2019ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 487.26 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 342 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்துள்ளது இந்த வங்கி.

இதே கடந்த மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் 5,024 கோடி ரூபாயாக உள்ளது. இதே முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 5,348.35 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 20 சதவிகிதமாக (28,673.95 கோடி ரூபாயாக) நிலை நிறுதப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 24.73 சதவிகிதமாக (37,109.96 கோடி ரூபாயாக) இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 1,204 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனால் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது. எனினும் வருவாய் குறைந்து நஷ்டம் அதிகரித்த போதிலும் இதன் வாராக்கடன் சற்று குறைந்திருப்பது நல்ல விஷமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வங்கியின் பிஎஸ்.இ சந்தை மதிப்பு 1,233.43 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இதற்கு முன்பு 9,717.57 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இந்த நிலையில் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட நிலையில், அன்று 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், தற்போதைய நிலையில் இன்று இதுவரை 3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு இந்தியன் ஒவர்சீஸ் வங்கிக்கு கூடுதல் மூலதனமாக 3,857 கோடி ரூபாயை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது துவண்டு போயுள்ள இந்த வங்கிக்கு மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும், தொடர் நஷ்டத்தினை சரிசெய்யவும், இந்திய ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ள நிலையில், கடந்த இரண்டாவது காலாண்டில் முன்பை விட 5 மடங்கு நஷ்டம் கண்டுள்ளது இந்த வங்கி.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications