டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், எந்தவொரு வேலைவாய்ப்பும் நிலையாக இருக்குமா? இல்லையா? என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க பணி நீக்கம் செய்து வருகின்றன.
இல்லையெனில் சம்பளத்தை குறைக்கின்றன. இந்த நிலையில் பலரின் பார்வை அரசு பணிகளின் பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
கடுமையான போட்டி
இந்த நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 1.2 லட்சம் காலியிடங்களுக்கு, சுமார் 2.4 கோடி பேர் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வேயில் இரண்டு விதமான வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. அசிஸ்டெண்ட் லோகோ பைலட் 64,371 காலியிடங்களும், இதே டெக்னீசியன் பணிக்கு 63,202 காலியிடங்களும் (குரூப் டி) இருப்பதாக கூறப்பட்டது.
அம்மாடியோவ் 1 வேலைக்கு 301 பேர் போட்டியா
இது ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 47.45 லட்சம் விண்ணப்பதாரர்கள், 64,371 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியுள்ளது. ஒரு வேலைக்கு 74 பேர் விண்ணபித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே டெக்னீசியன் பணிக்கு 1.9 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதன் மொத்த காலியிடங்கள் வெறும் 63,202 பேர் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஒரு வேலைக்கு 301 போட்டியாளர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூனியர் என்ஜினியர் பதவிக்கு மவுசு தான்
இந்த தேர்வானது ஜனவரி 21 முதல் ஜனவரி 23 வரையில் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறையே 77 சதவிகிதம் மற்றும் 88 சதவிகிதம் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, இதே ரயில்வே நிர்வாகம் 13,500 ஜூனியர் என்ஜினியர்களுக்கான தேர்வுக்கு 27.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் ஒரு பதவிக்கு 183 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
அரசு வேலையில் ஆர்வம் அதிகரிப்பு
இந்திய ரயில்வே நிர்வாகம் மட்டும் அல்ல, எந்தவொரு அரசு தேர்வாக இருந்தாலும் சரி, அங்கு ஒரு பதவிக்கு பல ஆயிரம் பேர் விண்ணபிப்பது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்தாலும், தற்போதைய காலத்தில் இது வெகுவாக அதிகரித்து வருவதை காணமுடிகிறது. ஏனெனில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் எந்த ஒரு வேலைக்கும் உறுதி சொல்ல முடியாத நிலையில், தற்போது அரசு வேலைகளுக்கு இன்னும் போட்டி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐ.ஐ,டி மாணவர் ஒருவர் டிராக்மேன் பணியானாலும் https://tamil.goodreturns.in/news/2019/08/27/iit-bombay-graduate-takes-up-railway-trackman-job-for-safety-015824.html பரவாயில்லை. இது அரசு பணி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications