ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, IRCTC e-Pantry என்ற புதிய உணவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களும் தங்கள் இருக்கையில் அமர்ந்தபடியே சூடான, சுகாதாரமான உணவை ஆர்டர் செய்து பெறலாம்.
முன்பு ராஜ்தானி, ஷதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் மட்டுமே உணவு டிக்கெட் விலையில் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு வசதி இல்லை.

இப்போது IRCTC e-Pantry சேவை மூலம் இந்த ரயில்களிலும் உணவு ஆர்டர் செய்ய முடியும். ரயில்களில் கிடைக்கும் உணவு-க்கு எவ்விதமான கூடுதல் விலையும் இல்லாமல் சாதாரண விலையில் கிடைக்கும், மேலும் IRCTC e-Pantry மூலம் ஆர்டர் செய்யும் போது அதிக விலைக்கு உணவை விற்க முடியாது. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் ஓடிச் சென்று உணவு வாங்க வேண்டிய அவசியமில்லை. சூடான உணவு நேரடியாக இருக்கைக்கு வந்து சேரும்.
தற்போது இந்த சேவை 25 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கிடைக்கிறது.
Swatantra Senani Express
Swarnjayanti Express
Karnataka Sampark Kranti Express
Mangala Island Express
Kalinga Utkal Express
Pushpak Express
Vivek Express
Paschim Express
Netravati Express
Grand Trunk Express
Poorva Express
Lichchavi Express
Azad Hind Express
Malwa Express
Ahmedabad-Barauni Express போன்ற ரயில்களில் தற்போது IRCTC e-Pantry சேவை துவங்கப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் பல ரயில்களில் இந்த வசதி விரிவாக்கப்படும்.
இந்த சேவையை பயன்படுத்த இரண்டு எளிய வழிகள் உள்ளன.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே IRCTC இணையதளம் அல்லது ஆப்பில் "E-Pantry / Food Option" என்பதை தேர்ந்தெடுத்து உணவை ஆர்டர் செய்யலாம். இல்லையெனில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு "Booked Ticket History" சென்று உங்கள் டிக்கெட்டை தேர்ந்தெடுத்து உணவை ஆர்டர் செய்யலாம்.
ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்டதும் உறுதிப்படுத்தல் செய்தி மற்றும் Meal Verification Code (MVC) SMS அல்லது மின்னஞ்சல் மூலம் வரும். பயணத்தின் போது பேன்டரி ஊழியர் இருக்கைக்கு வந்து MVC அல்லது SMS-ஐ காட்டினால் உணவை அளிப்பார்.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications