நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஒரு புறம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறைந்து மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தது. அதே வேளையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்கக்கூடிய பழக்கம் இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. தீபாவளி பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் வழக்கமாகவே தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து விலையும் உயரும். இந்த ஆண்டில் தங்கம் விலை சர்வதேச காரணிகளாலும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது.

இந்தியாவின் நிதி தலைநகரம் என அழைக்கப்படும் மும்பையில் நாட்டின் மிகப் பழமையான மற்றும் பாரம்பரியமான நகை சந்தை செயல்படுகிறது. இதனை ஜாவேரி பஜார் என அழைக்கிறார்கள். இந்த ஜாவேரி பஜாரில் தீபாவளி பண்டிகை என்றாலே விற்பனையும் கூட்டமும் களைகட்டும். இந்த ஆண்டும் தீபாவளியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்திருந்தார்களாம். ஆனால் இவ்வாறு வந்த மக்கள் பெரும்பாலானவர்கள் தங்க நகைகளுக்கு மாற்றாக இந்த ஆண்டு தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகளை வாங்கி இருக்கிறார்கள் .
ஜாவேரி பஜாரில் மொத்த விற்பனை கடை நடத்தி வரக்கூடிய மகாவீர் கோத்தாரி என்பவர் சிஎன்பிசி தளத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். எப்போதும் தீபாவளி பண்டிகையின் போது தங்க நகைகளுக்கான டிமாண்ட் தான் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த முறை தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டன எனக் கூறுகிறார் .
அனைத்திந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின் படி இந்த ஆண்டு தீபாவளியின் போது ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரையிலான 5 நாட்களும் இந்தியாவில் 8 பில்லியனில் இருந்து 11 மில்லியன் டாலர்கள் வரையிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார் கூறியிருக்கிறார்.
தீபாவளி பண்டிகையின் முதல் நாளான அக்டோபர் 19ஆம் தேதியே 40 டன்களுக்கும் அதிகமான தங்கம் விற்பனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி பண்டிகை என்றாலே பத்தில் ஒருவர்தான் தங்க நாணயத்தை வாங்குவார்கள் ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி இருந்தது என இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கூறுகிறார். இந்த ஆண்டு தங்க நகைகளின் விற்பனை முப்பது சதவீதம் குறைந்து இருப்பதாக அவர் தெரிவிக்கிறார் .
பெரும்பாலான இந்தியர்கள் தற்போது தங்கத்தில் செய்யும் முதலீடு பின்னாளில் தங்களுக்கு பெரிய அளவில் லாபம் தர வேண்டும் எனவும் தங்கத்தை ஒரு முதலீடாகவும் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர் என கூறுகிறார் .தங்கத்தை அணியும் ஒரு பொருளாக இல்லாமல் முக்கியமான ஒரு முதலீட்டு சொத்தாகவும் இந்தியர்கள் பார்க்க தொடங்கி இருக்கின்றனர் என்பதையே இந்த மாற்றம் குறிப்பிடுகிறது.
பொதுவாக தங்கத்தை நாம் நகையாக வாங்கினால் அதற்கு தங்கத்திற்கான விலையுடன் சேர்த்து செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஒரு பவுன் தங்கத்தின் விலை 90,000 ரூபாய் என வைத்து கொண்டால் செய்கூலி சேதாரம் 15% , ஜிஎஸ்டி 3% என நாம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும். இதுவே நாணயம் , பார் என்றால் 90,000 ரூபாயுடன் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதும் செய் கூலி சேதாரம் மிக குறைவாகவே தான் இருக்கும்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications