தங்கம் மற்றும் வெள்ளி விலை தான் கடந்த ஓராண்டு காலமாகவே பேசு பொருளாக இருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டு உலோகங்களுமே உலக அளவில் சரி உள்ளூர் சந்தையிலும் சரி மிக வேகமாக விலை உயர்ந்தன.
தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் விலை புது பணக்காரனை போல ஒவ்வொரு நாளும் கிலோவுக்கு 20 முதல் 30000 ரூபாய் என்றெல்லாம் உயர்வு கண்டது. சாதாரண மக்களுக்கு தங்கம் , வெள்ளி விலை உயர்வு என்றால் இன்று விலை நிலவரத்தை பார்ப்போம், என்ன இவ்வளவு விலை உயர்ந்து விட்டதே என புலம்பி கொண்டே சென்று விடுவோம்.

ஆனால் இதனையே வர்த்தகமாக கொண்டிருப்பவர்களின் நிலை தான் தற்போது பரிதாபமாக உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் பேடக் சாலை இந்தியாவின் வெள்ளி சாலை. நாடு முழுவதும் உள்ள நகை விற்பனையாளர்கள் இங்கு தான் கட்டி கட்டியாக வெள்ளியை வாங்கி செல்கிறார்கள். மொத்த விலையில் வெள்ளியை கட்டிகளாக விற்பனை செய்பவர்களும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
ஆனால் இங்கே தற்போது தொழிலே தத்தளித்து கொண்டிருக்கிறது. ராஜ்கோட் வெள்ளி விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலாளரான அரவிந்த் நிம்பாசியா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கம், வெள்ளிக்கான தேவையை முன்பை போல இல்லை என கூறுகிறார். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 25 லிருந்து 30 டன்கள் வரை வெள்ளியை வாங்கி விற்பனை செய்து வந்த வணிகர்கள் பலரும் தற்போது மாதத்திற்கு ஒரு டன் கூட விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர் என கூறுகிறார்.

வெள்ளி விலை திடீரென உயர்ந்ததும், சரிந்ததும் இதற்கு காரணம். இதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் பல வணிகர்களும் தங்களுடைய கடைகளை இழுத்து மூடிவிட்டனர் என்றும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் கடையே திறந்து வைக்கிறார்கள். அதுவும் நஷ்டம் ஏற்படுகிறது என்பதால் பல ஊழியர்களை வேலையில் இருந்து கூட நீக்கி விட்டார்கள் என கூறுகிறார். இங்கே வெள்ளி மொத்த விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு இருக்க கூடிய பல வியாபாரிகளும் ஒப்பந்த முறையில் இருந்து ஊழியர்கள் அனைவரையும் வேலைகளில் நீக்கி விட்டார்கள் என்கிறார் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறி போய் இருக்கிறது என அவர் குறிப்பிடுகிறார்.
ஆசியாவின் மிகப்பெரிய வெள்ளி சந்தை தான் ராஜ்கோட்டின் இந்த சந்தை. இங்கே வெள்ளி கட்டிகள் டன் கணக்கில் கிடைக்கும், நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகை விற்பனையாளர்கள் இங்கிருந்துதான் வெள்ளி வாங்கிகொண்டு சென்று அதனை நகைகளாகவும் நாணயங்களாகவும் பொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்கிறார்கள்.
மொத்த விற்பனையாளர்கள் நகை கட்டிகளை அனுப்பி விடுவார்கள் உரிய நபரை சென்ற பின் தான் முழு பணமும் கைக்கு வருமாம். நம்பிக்கை அடிப்படையில் தான் இவை அனைத்துமே நடக்கும். ஆனால் வெள்ளி அனுப்பும் போது ஒரு விலை, பெறும் போது ஒரு விலை, தங்கள் கைகளுக்கு பணம் வரும் போது ஒரு விலை என இருப்பதால் 44 நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றுவிட்டன, 3500 கோடி ரூபாய் நஷ்டமடைந்துவிட்டன என கூறுகிறார்.
சிறிய அளவு விலை ஏற்ற இறக்கம் என்பதில் பிரச்சனை இல்லை ,ஒரே நாளில் வெள்ளியின் விலை 30 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கிறது பின்னர் சரிகிறது இதில் எப்படி தொழில் புரிய முடியும் என வினவுகிறார். முதலில் ஒரு டன் வெள்ளி 10 கோடி ரூபாய்க்கு கிடைத்தது பின்னர் அதன் விலை 36 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது பின்னர் 26 கோடி ரூபாயாக சரிந்தது எனக் கூறும் ஒரு மொத்த விலை விற்பனையாளர் ஒவ்வொரு நாளும் இப்படி விலை ஏறி இறங்குவதை வைத்துக்கொண்டு தொழில் செய்ய முடியவில்லை எனகிறார்.

மும்பை ஜாவேரி பஜார் இந்தியாவின் பெரிய தங்க சந்தை. இங்கேயும் இதே நிலைமைதான் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிட்டது என மொத்த வியாபாரிகள் புலம்புகின்றனர். பலரும் வருகை தருகிறார்கள் பார்க்கிறார்கள், விலை கேட்கிறார்கள் ஆனால் வாங்காமலேயே சென்று விடுகிறார்கள் என்கின்றனர். திருமண நிகழ்வுகளுக்காக நகை வாங்க வருவோர் கூட கூட குறைந்த எடை கொண்ட தங்கத்தை தான் வாங்குகிறார்கள் என்கின்றனர்.
முதலில் தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளியாவது வாங்குவார்கள், தற்போது வெள்ளியும் விலை உயர்ந்து விட்டதால் அதையும் வாங்காமல் செல்வதாக அங்கே கடை நடத்தி வரக்கூடிய நித்தில் ஜோதா என்பவர் பேட்டி அளித்திருக்கிறார். இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான குமார் ஜெயின் தங்கம் மற்றும் வெள்ளி நகை வர்த்தகமே பெரிய சவாலான சூழலில் இருக்கிறது என்கிறார். காலை ஒரு விலை, மாலை ஒரு விலை என ஒவ்வொரு நாளும் ஒரு திசையில் இருப்பதால் வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்பதாக தெரிவிக்கிறார்.
More From GoodReturns

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம், வெள்ளி விலை: பிப்ரவரியில் நடந்த மேஜிக் மார்ச் மாதத்திலும் தொடருமா?

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் விலை 2 நாள் சரிவுக்கு பின்பு தடாலடி உயர்வு.. வெள்ளி விலை 3 லட்சத்தை தொட்டது..!!

தங்க நகை சந்தையே மாறி போச்சு!! இப்போ மக்கள் இதை தான் அதிகமா வாங்குறாங்க: நகை விற்பனையாளர்கள் தகவல்!!

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய தங்க சந்தையில் தள்ளுபடி – சீனாவில் பிரீமியம் விலை? ஏன்?

ஈரான் போர்: ஞாயிற்றுக்கிழமையிலும் உயர்த்தப்பட்ட தங்கம் விலை!! இனி தங்கம் விலையை கையில பிடிக்க முடியாது!!

முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?



Click it and Unblock the Notifications