மார்ச் 2025ஆம் தேதி வரை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்துள்ள தங்க கையிருப்பு 879.58 டன் ஆக உயர்ந்துள்ளது. இது 2020 பாதியில் இருந்ததை விட சுமார் 33% அதிகம் ஆகும். தங்கம் தற்போது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு சொத்துக்களில் 12% ஆகும். கடந்தாண்டு இது 8.3% மட்டுமே இருந்தது.
இந்த உயர்வுக்கு தங்க விலை உயர்வு மற்றும் முறையான மத்திய வங்கி கொள்முதல் காரணமாக அமைகிறது. உலக மத்திய வங்கிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 1,000 டன்களுக்கும் அதிகமாக தங்கம் வாங்கியுள்ளன. இந்தியா தற்போது வெளிநாடுகளில் வைத்திருந்த தங்கத்தை மீண்டும் நாடு திரும்ப கொண்டுவர தொடங்கியுள்ளது. இது வெளிநாட்டு கையிருப்புகளுக்கான உலகளாவிய கவலையை பிரதிபலிக்கிறது.

உலக ரிசர்வுகளில் டாலரின் பங்கு குறைந்து வருவதால், இந்தியா தனது US Treasuries-இல் முதலீட்டை நிலைத்த அளவில் வைத்துக்கொண்டு, ஒருபக்கம் தங்க கையிருப்பை அதிகரித்து சமநிலையில் வைக்கிறது. இந்த நடவடிக்கைகள், அமெரிக்க டாலரின் மீது சார்பை குறைத்து, பாதுகாப்பான சொத்துகளாக தங்கத்தைப் பெருக்குவதற்கும், சுற்றுச்சூழல் அச்சங்கள் மற்றும் மந்தநிலை அபாயங்களுக்கு எதிராக நிதிச்சுமையை சமநிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கிகள் தங்கத்தை தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பதாகவும், இது தொடரும் என்றும் உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய "மத்திய வங்கி தங்க கையிருப்பு கணக்கெடுப்பு" தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற மத்திய வங்கிகளின் 95% பேர், அடுத்த 12 மாதங்களில் உலகளாவிய தங்க கையிருப்புகள் மேலும் உயரும் என தெரிவித்துள்ளனர். 43% பேர் தங்களது சொந்த தங்க கையிருப்புகளும் அதே காலகட்டத்தில் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இது, தங்கம் மீதான நம்பிக்கையும், அதன் பாதுகாப்பு மதிப்பும் உலக அளவில் வளர்ச்சியுடன் தொடரும் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், இந்த ஆய்வில் பங்கேற 73% பேர், அடுத்த 5 ஆண்டுகளில் உலக ரிசர்வுகளில் அமெரிக்க டாலரின் பங்கு மிதமான அளவிலும் அல்லது குறிப்பிடத்தக்க அளவிலும் குறையும் என நம்புகின்றனர். அதே காலகட்டத்தில் யூரோ, ரென்மின்பி (சீன யுவான்) போன்ற பிற நாணயங்களும், தங்கத்தின் பங்கும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இது, அமெரிக்க டாலரின் மீது குறைவான சார்பு மற்றும் நாணயங்கள், தங்கத்தின் மீது அதிக நம்பிக்கை ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது.
இதுகுறித்து யூரோப்பிய மத்திய வங்கி கூறுகையில், "மத்திய வங்கிகள் வைத்துள்ள உலகளாவிய தங்க கையிருப்புகள் தற்போது 36,000 டன் ஆக உள்ளன. இது 1965ஆம் ஆண்டில் பதிவான 38,000 டன் என்ற அனைத்து காலங்களிலும் அதிகபட்சமாக இருந்த அளவுக்கு மிக அருகில் உள்ளது. மேலும், தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டுள்ள நிலையில், சந்தை விலைகளின் அடிப்படையில் உலக வெளிநாட்டு கையிருப்புகளில் தங்கத்தின் பங்கு 20% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்குவது ஏன்..?: யூரோப்பிய மத்திய வங்கியின் (ECB) ஆய்வின் படி, "மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம், பல்வகைப்படுத்தலுக்கு என்று கூறியுள்ளன. மேலும், புவியியல் அரசியல் அபாயங்களில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். அதேபோல், அமெரிக்காவின் சமீபத்திய கொள்கைகள், ஒருதலைப்பட்சமான வரி தீர்மானங்கள், அதிகமான பட்ஜெட் இழப்புகள் இவை அனைத்தும் மத்திய வங்கிகளை டாலர் சொத்துகளிலிருந்து விலகச் செய்கின்றன.
அதிகளவு தங்கத்தை வாங்கும் இந்திய மத்திய வங்கி : இந்திய மத்திய வங்கியும், தனது கையிருப்புத் தங்கத்தை அதிகரித்து வருகிறது. மார்ச் 31, 2024 நிலவரப்படி 822.1 மெட்ரிக் டன்னாக இருந்த ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு மார்ச் 31, 2025 நிலவரப்படி 879.58 டன்னாக உயர்ந்துள்ளது. முந்தைய 5 ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 103.66 டன்கள் இருந்தது. தங்க இருப்பு அதிகரிப்பு என்பது மத்திய வங்கிகளுக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. ஏனெனில், உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ள நிலையில் தங்கத்தின் பாதுகாப்பான புகலிட அந்தஸ்தில் விலைகள் உயர்ந்துள்ளன. ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை, அதன் தங்க இருப்புக்களின் மதிப்பு 2024-25இல் டாலர் அடிப்படையில் 48% அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் தான், ரிசர்வ் வங்கி வெளிநாட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை அதன் சொந்தப் பெட்டகங்களுக்குள் திரும்பக் கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்ய வெளிநாட்டு இருப்புக்கள் முடக்கப்பட்டபோது, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புவிசார் அரசியல் காலகட்டத்தில் மத்திய வங்கிகளுக்கு விருப்பமான சொத்தாக தங்கம் உருவெடுத்து வருவதால், சந்தேகத்திற்கு இடமில்லாத பண சீரமைப்பின் மத்தியில் நாம் உள்ளோம். டாலர் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், அதன் சவாலற்ற மேலாதிக்கத்திற்கு இனி உத்தரவாதம் இல்லை. தற்போதுள்ள நிதி கட்டமைப்புகள் மீதான நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கும் உலகில், தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications