தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது நூடுல்ஸ் விலையை உயர்த்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என தாய்லாந்து அரசிடம் நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டை பொருத்தவரை நூடுல்ஸ் என்பது பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு என்பதால் அந்த உணவின் விலை ஏற்றத்தை அரசாங்கத்தின் அனுமதி கொண்டே ஏற்ற வேண்டும்.
எனவே 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருக்கும் நிலையில் தற்போது தயாரிப்புக்கு அதிக செலவு ஆவதால் நூடுல்ஸ் விலையை ஏற்றிக்கொள்ள நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இந்த கோரிக்கையை உடனடியாக தாய்லாந்து அரசால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.
நூடுல்ஸ் விலை
நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் அறிக்கைப்படி தாங்கள் நூடுல்ஸை உற்பத்தி செய்ய 6 பாட் முதல் 7 பாட் வரை செலவாகிறது என்றும் ஆனால் விற்பனை விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த போதிலும் உடனடியாக நூடுல்ஸ் விலையை உயர்த்த அரசு மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் அனுமதி
நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கம் இருந்தாலும் தாய்லாந்து மக்கள் நூடுல்ஸ் உணவை அதிகம் பயன்படுத்துவதால் அவர்கள் மீது அதிக சுமை சுமத்துவதை அனுமதிக்க முடியாது என்று தாய்லாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சிறிய அளவில் விலையை உயர்த்த விரைவில் அரசு அனுமதிக்கும் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.
விலை உயர்வு
தாய்லாந்து நாட்டில் மொத்தம் ஐந்து முக்கிய நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் விலை உயர்வு கோரிக்கையை விடுத்த நிலையில் விலையை உயர்த்துவதற்கு தாய்லாந்து அரசு அனுமதி ஆலோசனை செய்து கூறப்படுகிறது. எனவே 14 ஆண்டுகளுக்கு பின் சிறிய அளவில் விரைவில் நூடுல்க்ஸ் விலை தாய்லாந்தில் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
உக்ரைன் மீதான போர்
நூடுல்ஸை உயர்வுக்கு முக்கிய காரணம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் வரும் போர் என்று கூறப்படுகிறது. இந்தப் போர் காரணமாக நூடுல்ஸ் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் போக்குவரத்து கட்டணமும் இரு மடங்கு உயர்ந்து உள்ளதாகவும் நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆசியா முழுவதும் விலை உயர்வு
ஏற்கனவே ஆசியா முழுவதும் நூடுல்ஸ் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்தில் மட்டும் இன்னும் பழைய விலைக்கே விற்பனையாகி வருவதாக நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி
இந்த நிலையில் நூடுல்ஸ் உற்பத்தியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரசு நூடுல்ஸ் விலையை உயர்த்த அனுமதிக்காவிட்டால் அதிக விலைக்கு வாங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் மொத்த உற்பத்தியையும் ஏற்றுமதி செய்யப்போவதாகவும் நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications