தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் கதறக் கதற உயர்ந்து வருகிறது. ஒருபக்கம் முதலீட்டாளர்கள் எந்த பக்கம் சொல்வது என தெரியாமல் இருக்கின்றனர், மறுபுறம் செய்த முதலீட்டைச் சரிவில் இருந்து காப்பாற்ற எதில் முதலீடு செய்யலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே புகலிடமாக்க இருப்பது தங்கம் தான்.
அமெரிக்கச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது தங்கம் விலை ஸ்பாட் சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,086 அமெரிக்க டாலர்களைத் தொட்டு, பின்னர் 3,085 டாலர் விலையில் முடிந்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 கிராம் தங்கம் விலை 93100 ரூபாயை தொட்டுள்ளது.

இந்த தடாலடி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் டிரம்ப்-ன் விரி விதிப்பாக இருந்தாலும், நேற்றைய திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும், கிரிப்டோ சந்தையிலும் பதிவான மோசமான சரிவு தான்.
அமெரிக்கச் சந்தையில் முதலீட்டு செய்துள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குச் சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி முதலீடுகளை விற்று, பாதுகாப்பான முதலீட்டுத் தலமான தங்கத்தை நோக்கிப் படையெடுத்துள்ளதால் நேற்றைய வர்த்தகத்தில் 3068 டாலரில் இருந்து 3086 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கத்தின் விலையில் 3,100 டாலர் என்பது புதிய பென்ச்மார்க் விலையாக இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோ கரன்சி சந்தையை மோசமான நிலைக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்காவின் பிப்ரவரி மாத தனிநபர் நுகர்வு செலவினங்கள் (PCE) தரவுகள் வெளியானது தான். மாதாந்திர PCE குறியீடு 0.4% ஆக அதிகரித்துள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட 0.3% ஐ விட அதிகமாகும். இது அமெரிக்காவில் பணவீக்கத்தின் அதிகரித்திருப்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள காரணத்தாலும், டிரம்ப்-ன் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பும் அந்நாட்டில் விரைவில் ரெசிஷன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் முன்கூட்டியே தங்களுடைய முதலீட்டைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர். இதன் விளைவாகவே தங்கம் விலை வெறும் 7 நாளில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3003 டாலரில் இருந்து 3086 டாலர் விலைக்கு உயர்ந்துள்ளது.
இந்த விலை மாற்றம் இந்திய சந்தையில் கட்டாயம் எதிரொலிக்கும், ஆனால் இந்தியாவில் ஏற்கனவே தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் சாமானிய மக்கள் தங்கம் வாங்கவதை அதிகளவில் குறைத்துள்ளனர். இதனால் இந்திய சந்தையில் டிமாண்ட் குறைந்து தங்கம் விலையில் தேக்க நிலை உருவாகியுள்ளது, அதாவது விலை அளவு சர்வதேச சந்தைக்கு ஏற்ப மட்டுமே திருத்தம் செய்யப்பட்டு வருகிறது, உள்நாட்டு காரணிகள் கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications