ஐஆர்சிடிசி தொடங்கும் புது வியாபாரம்.. ரயில் பயணிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் அதிர்ஷ்டம்!
இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி என்ற அமைப்பு தற்போது ரயில்வே டிக்கெட் மற்றும் கேட்டரிங் சேவைகளை செய்து வருவது என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில ஆண்டுகளாக ஐஆர்சிடிசி சுற்றுலா துறையிலும் கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கி வரும் நிலையில் தற்போது அவர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்ஜெட் ஹோட்டல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது சுற்றுலா செல்பவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி இந்த ஹோட்டல் தொடங்கப்படும் அருகில் உள்ள பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கும் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பாகும்.
{photo-feature}


Click it and Unblock the Notifications