இந்தியாவில் உணவு ஆர்டர் செய்யும் செயலிகள் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக நகரங்களில் இந்த செயலிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போனில் ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற செயலிகளை கிளிக் செய்து நமக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தால் போதும்.
குறிப்பிட்ட நிமிடங்களில் நமக்கு பிடித்த உணவு கைக்கு வந்துவிடும். இனி ரயிலில் பயணிக்கும் போது இந்த சேவையை பெற முடியும் என பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐஆர்சிடிசி.

ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி: ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேசன், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியிடம் பார்டனர்ஷிப் போட்டுள்ளது.
ஐஆர்சிடிசியின் ஈ-கேட்டரிங் தளம் மூலம் பயணிகள் முன் கூட்டியே ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி ரயில் பயணிகள் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களை ஸ்விக்கி நிறுவனம் நேரடியாக பயணிகளின் இருக்கைக்கே கொண்டு வந்து சேர்த்துவிடும்.
4 ரயில் நிலையங்களில் முதல்கட்ட சோதனை: முதல் கட்டமாக நான்கு ரயில் நிலையங்களில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் மார்ச் 12 ஆம் தேதி முதல் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரிக்கான சேவை துவங்க உள்ளதாக ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து 59 ரயில் நிலையங்களில் இது விரிவுப்படுத்த முடிவெடுத்துள்ளது.
ஐஆர்சிடிசி பங்குகள் உயர்வு: மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த ஒழுங்குமுறை ஆவணப்பதிவில் இந்த திட்டம் குறித்து ஐஆர்சிடிசி விளக்கியுள்ளது. ஸ்விக்கி வழியே ஈ-கேட்டரிங் சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸோமேட்டோவுடன் கைக்கோர்ப்பு: ஐஆர்சிடிசி என்பது இந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் சேவை வழங்கும் ஒரு அமைப்பு. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி பல்வேறு நிறுவனங்களுடன் கை கோர்த்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு , ஐஆர்சிடிசி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமேட்டோவுடன் இணைந்து சில ரயில் நிலையங்களில் உணவு டெலிவரி சேவையை வழங்கியது. டெல்லி, பிரயாக்ராஜ் , கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசியில் ஸோமேட்டோ சேவை வழங்கியது.
இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஸ்விக்கியுடனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இனி ரயில் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை உள்ளூர் சுவைக்கு ஏற்ப ஆர்டர் செய்து சாப்பிட முடியும். இதனிடையே ஸ்விக்கி இந்த ஆண்டு ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் களமிறங்க உள்ளது.
ஐபிஓ மூலம் 8,300 கோடி ரூபாயை திரட்ட ஸ்விக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐஆர்சிடிசி உடனான இந்த ஒப்பந்தம் ஸ்விக்கியின் வளர்ச்சிக்கு மேலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications