அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்ற லஞ்ச புகாரை தெரிவித்திருக்கும் நிலையில் இஸ்ரேல் நாடு அதானி குழுமம் தொடர்ந்து தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதே போல ஜப்பானை சேர்ந்த வங்கிகள் அதானிக்கு நிதி ஆதரவை தொடர்வோம் என கூறியுள்ளன.
இந்தியாவில் சில மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மறைத்து அமெரிக்காவிலிருந்து முதலீடுகளைப் பெற்று அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்து கௌதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.
ஆனால் அதானி குழுமம் இந்த லஞ்ச குற்றச்சாட்டை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும். இதனை சட்டரீதியாக தாங்கள் எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரிய சரிவை சந்தித்தன. இதனிடையே பல்வேறு நாடுகளும் அதானி குழுமத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. குறிப்பாக இஸ்ரேல் அதானி குழுமம் தொடர்ந்து தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்ந்து இஸ்ரேலில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூபன் அசார் ராய்டர்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமத்தின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் வடக்கு இஸ்ரேலில் இருக்கும் துறைமுகத்தில் 70 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி ராணுவத்திற்கான ட்ரோன் மற்றும் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளையும் அங்கே நிறுவ இருக்கிறது. இவ்வாறு இஸ்ரேல் நாட்டில் பல்வேறு துறைகளிலும் அதானி குழுமம் முதலீடு செய்திருக்கும் நிலையில் தான் அதானிக்கு ஆதரவான கருத்தினை இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேபோல ஜப்பானை சேர்ந்த வங்கிகளும் அதானி குழுமத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Mizuho Financial Group Inc, Sumitomo Mitsui Financial Group Inc, Mitsubishi UFJ Financial Group Inc ஆகியவை அதானி குழுமத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவு வழங்குவோம் என தெரிவித்துள்ளன.
அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் மீது ஒரு குறுகிய கால தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் இது அந்த நிறுவனத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஜப்பான் வங்கிகள் தெரிவித்துள்ளன.
இந்த நிறுவனத்திற்கு தேவையான நிதியை நாங்கள் வழங்குவோம் என Mizuho Financial தெரிவித்துள்ளது. அதானி குழுமம் வெற்றிகரமாக தன்னுடைய துறைமுக மற்றும் விமான நிலைய பணிகளை மேற்கொண்டு வருவதும்,பல்வேறு துறைகளில் தங்களை விரிவாக்கம் செய்து வருவதுமே இப்படி வெளிநாட்டு வங்கிகள் ஆதரவளிக்க காரணமாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications