இந்தியாவில் ஐடி, தொழில்நுட்பம் மற்றும் மீடியாவில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அதிகபட்ச மன அழுத்தத்தை சந்திப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய துறைகளாக கருதப்படக்கூடிய தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் மீடியா ஆகிய துறைகளில் பணிபுரியக்கூடிய ஐந்தில் மூன்று ஊழியர்கள் அதிகபட்ச மன அழுத்தத்தை சந்திக்கிறார்களாம். YourDOST என்ற நிறுவனம் , பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன ஆரோக்கியம் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது.
அதில் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் வெளியாகியிருக்கும் தகவலின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பணியாளர்கள் தான் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 50 வயதுக்குட்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவது சற்றே குறைவாக இருக்கிறது.

தங்களுடைய வேலை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் , வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன் செய்ய முடியாதது, வேலைக்கு உரிய அங்கீகாரம் இல்லை ஆகிய மூன்று காரணங்கள் தான் ஊழியர்களின் மன அழுத்தத்திற்கு காரணம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 31% அதிகரித்துள்ளதாம். இதில் அதிக மன அழுத்தம் கொண்டிருப்பவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20% பேர் தங்களால் தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் வேலையையும் சமன் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திற்கும் சென்ற வருவது அதிக சுமை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். மேலும் பெரும்பாலான பெண்கள், ஆண்களுக்கு நிகராக தங்களுடைய வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
கிட்டதட்ட 20% பேர் தங்களால் தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் வேலையையும் சமன் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திற்கும் சென்ற வருவது அதிக சுமை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். மேலும் பெரும்பாலான பெண்கள், ஆண்களுக்கு நிகராக தங்களுடைய வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் மத்தியில் இது போன்ற மன அழுத்தம் அதிகரித்து வருவது நிறுவனங்களுக்கு பெரிய பிரச்சினையாக முடியும் என கூறும் இவர் YourDOST, நிறுவனத்தின் தலைமை உளவியல் அதிகாரியான ஜெனி கோபிநாத், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு என எம்பிளாயி சப்போர்ட் ப்ரோக்ராம் என்பதை கொண்டு வந்து அவர்களுக்கு மன ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட முறையில் அவர்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தேவையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என கூறுகிறார். ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications