எஃப்எம்சிஜி துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய ஐடிசி 2025ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 19,562 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் எப்எம்சிஜி பிரிவில் முன்னணி நிறுவனமாக ஐடிசி நிறுவனம் இருக்கிறது, இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் உற்பத்தியாளராகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் உடன் முடிந்த 2025 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 19,562 கோடி ரூபாயாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது அதாவது கடந்த ஆண்டை விட 4,875 கோடி இந்த நிறுவனம் இந்த முறை கூடுதலாக லாபம் பெற்று இருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருமானம் என்பது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,900 கோடி ரூபாயாக இருந்தது அது இப்போது 18,494 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
இதனை அடுத்து ஐடிசி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்கிற்கு ரூ.7.85 டிவிடெண்ட் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் செலவினங்களை குறைத்தது, பெரிய அளவு மக்களுக்கு சம்பள உயர்வு இல்லாதது உள்ளிட்டவை காரணமாக நுகரும் போக்கு குறைந்து காணப்பட்டதாக தெரிவித்திருக்கும் ஐடிசி நிறுவனம் இதுவே எஃப்எம்சிஜி பிரிவு சற்றே மந்தமடைவதற்கு காரணமாக இருந்தது என தெரிவித்திருக்கிறது.
தற்போது பருவமழை காலம் தொடங்கி இருக்கிறது மக்களிடையிலும் செலவு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கிறது எனவே அடுத்து வரக்கூடிய காலாண்டு முடிவுகள் எல்லாம் தங்கள் நிறுவனத்தின் வருவாயும் லாபமும் அதிகரிக்கும் என நம்புவதாக ஐடிசி தெரிவித்திருக்கிறது. ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் தொழில் மூலம் அதன் வருமானம் என்பது 6 சதவீதம் உயர்ந்திருக்கிறது அதாவது சிகரெட் விற்பனையின் மூலம் மட்டும் இந்த நிறுவனம் 8,399 கோடி வருமானமாகவும் அதில் 5,017 கோடி லாபமாகவும் ஈட்டி இருக்கிறது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் சிகரெட் வணிகம் மூலம் இதற்கு கிடைத்த லாபம் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மற்ற எஃப் எம் சி ஜி வணிகத்தை பொறுத்தவரை இந்த நிறுவனத்தின் வருமானம் 5494 கோடி என கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 3.7% அதிகரித்து இருக்கிறதாம். குறிப்பாக ஆட்டா , மசாலா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
தன்னுடைய வேளாண் தொழில் மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 7.85 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது . நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த உடன் டிவிடெண்ட் வழங்குவதற்கான தேதி குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications