இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாவில் பகிர்ந்த செல்ஃபி வீடியோவில் நாட்டு மக்களிடம் டாலர் இருப்பை சேமிக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டில் திருமணம் நடத்துவது, தேவையற்ற சூழ்நிலையில் அளவுக்கு அதிகமாக தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மோடியின் வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களில், தங்க நகை கடை நிறுவன பங்குகள் சரிய துவங்கியது. சில மாதங்களுக்கு முன்பு நாட்டின் டாலர் இருப்பு வேகமாக குறைந்து ரூபாய் மதிப்பு சரிந்த போதும் மோடி இதேபோன்ற வீடியோவை வெளியிட்டார். அப்போதும் தங்க நகை கடைகளின் பங்குகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில் டைட்டன், ஸ்கை கோல்டு, கல்யாண் ஜூவல்லரி, தங்கமயில் ஜூவல்லரி போன்ற பெரும்பாலான நகை கடை பங்குகள் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது. தங்கமயில் ஜூவல்லரி பங்குகள் 1.47 சதவீதம் சரிந்து 5331.85 ரூபாய்க்கும், கல்யாண் ஜூவல்லரி 6.63 சதவீதம் சரிந்து 573.65 ரூபாய்க்கும், டைட்டன் 1.58 சதவீதம் சரிந்து 5035 ரூபாய்க்கும் சரிந்துள்ளது. ஆனால் புதிதாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள லலிதா ஜூவல்லரி பங்குகள் 3.54 சதவீத வளர்ச்சியில் 267.65 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
மே மாதத்திற்கு பின்பு மீண்டும் மோடி தங்கத்தை குறிவைத்து பேசியிருப்பது பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தற்போதைய இலக்கு என்னவென்றால் தங்கம், எரிபொருள் பயன்பாட்டையும் கொள்முதலையும் குறைக்கும் போது பெரிய அளவிலான அன்னிய செலாவணியை சேமிக்க முடியும் என்பது தான்.
ஆனால் இதற்கு முன்பு எந்த மத்திய அரசும், பிரதமரும் மக்களை தங்கம் வாங்க வேண்டாம், எரிபொருள் பயன்பாட்டை வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது இல்லை, இதனால் மோடியின் இந்த 2வது முறை கோரிக்கையும் மக்கள் மக்தியில் கலவையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
மோடியின் மே மாத வீடியோ மெசேஜ்க்கு பின்ரும் ஒவ்வொரு மாதமும் தலா 60 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது, இதன் மூலம் இந்தியா ஒவ்வொரு மாதமும் 6 பில்லியன் டாலர் அன்னிய செலாவணியை தங்கத்திற்காக மட்டுமே முதலீடு செய்கிறது.


Click it and Unblock the Notifications